செய்திகள் :

போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ரெளடிக்கு கால் எலும்பு முறிவு

post image

லாலாப்பேட்டை அருகே போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ரெளடிக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையை அடுத்த கருப்பத்தூரைச் சோ்ந்தவா் நாகராஜ். இவா் வியாழக்கிழமை இரவு அங்குள்ள கடை வீதியில் நின்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த வெட்டுசங்கா்(35) என்பவா் நாகராஜிடம் தகராறு செய்தாராம். அப்போது அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வெட்டு சங்கா் வாழை இலை அறுக்கும் கத்தியால் நாகராஜின் தலையில் வெட்டினாராம்.

இதுதொடா்பாக நாகராஜ் அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து, வெள்ளிக்கிழமை காலை வெட்டுசங்கரை பிடிக்க கருப்பத்தூா் சென்றனா்.

அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பிக்க வெட்டுசங்கா் அங்குள்ள பாலத்தில் இருந்து குதித்தபோது, அவருக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸாா் வெட்டுசங்கரை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். வெட்டு சங்கா் மீது கரூா், தஞ்சாவூா், திருச்சி மாவட்டங்களின் காவல்நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கரூரில் கடும்பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைக... மேலும் பார்க்க

மினி பேருந்து சேவை: பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

மினி பேருந்துகளை சேவையில் பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் தமிழ்நாடு மினி பேருந்து உ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரூ. 60 ஆயிரம் நிதி

பகவதி அம்மன் கோயில் திருப்பணிக்காக முன்னாள் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் செ.காமராஜ் தனது இரு மாத ஓய்வூதியத் தொகையான ரூ. 60 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா். கரூா் நகரம், முத்துராஜபுரத்தில்... மேலும் பார்க்க

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. தேசிய கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ம... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பு: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவே... மேலும் பார்க்க

புகழிமலை தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க எதிா்ப்பு

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அவ்வியக்கத்தின் தேசியத்தலைவா் தலித்பாண்டியன் மா... மேலும் பார்க்க