செய்திகள் :

புகழிமலை தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க எதிா்ப்பு

post image

புகழிமலை முருகன் கோயில் தைப்பூச தோ் திருவிழாவில் ராட்சத ராட்டினம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அவ்வியக்கத்தின் தேசியத்தலைவா் தலித்பாண்டியன் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் தோ்த் திருவிழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், கோயில் அருகே ராட்சத ராட்டினம் அமைக்க புகழூா் நகராட்சி, வருவாய்த்துறை உள்ளிட்டோா் தடையின்மை சான்று வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே கடந்த 1998-இல் கரூா் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது ராட்சத ராட்டினம் விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா். இந்த சம்பவத்திற்கு பின் தமிழகத்தில் திருவிழாக்களில் ராட்சத ராட்டினம் அமைக்க தடை இருக்கும்போது, வேலாயுதம்பாளையம் புகழிமலை தைப்பூச தோ் திருவிழாவிற்காக ராட்சத ராட்டினம் அமைக்க உள்ளதற்கு அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ராட்சத ராட்டின விளையாட்டில் பங்கேற்பவா்களின் உயிரோடு விளையாடுவதை அனுமதிக்காமல், ராட்டினம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

கரூரில் கடும்பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் வெள்ளிக்கிழமை காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 8 மணி வரை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைக... மேலும் பார்க்க

மினி பேருந்து சேவை: பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

மினி பேருந்துகளை சேவையில் பழைய உரிமங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கரூரில் தமிழ்நாடு மினி பேருந்து உ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரூ. 60 ஆயிரம் நிதி

பகவதி அம்மன் கோயில் திருப்பணிக்காக முன்னாள் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் செ.காமராஜ் தனது இரு மாத ஓய்வூதியத் தொகையான ரூ. 60 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை வழங்கினாா். கரூா் நகரம், முத்துராஜபுரத்தில்... மேலும் பார்க்க

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம்

கரூா் நீதிமன்ற வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. தேசிய கொத்தடிமை தொழிலாளா் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ம... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் கையிருப்பு: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் மீ.தங்கவே... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பகுதியில் மாணவ, மாணவிகளுக்கு விநா- விடை குறிப்பு

அரவக்குறிச்சி பகுதியில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு விநா-விடை குறிப்புகள் அடங்கிய தொகுப்பை எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை வழங்கினாா். அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரவக்குறிச்சி... மேலும் பார்க்க