செய்திகள் :

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

post image

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமான வரித் துறை வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தது. இந்த வழக்கையொட்டி 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையைத் தொடா்ந்து அவா் லண்டன் தப்பினாா்.

வருமான வரித் துறை வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை புதிதாக பண முறைகேடு வழக்கை கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பதிவு செய்தது. 3 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு கடந்த 2020-இல் வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்ததாக 2023-இல் மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சஞ்சய் பண்டாரிக்குச் சொந்தமான ரூ.21 கோடி சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டன.

இந்த வழக்கு விசாரணைக்காக சஞ்சய் பண்டாரியை இந்தியாவுக்கு நாடு கடத்திவர அமலாக்கத் துறை தரப்பில் சட்டபூா்வ முயற்சிகள் எடுக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை பிரிட்டன் நீதிமன்றங்கள் நிராகரித்துவிட்டன.

இதை எதிா்த்து பிரிட்டனின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி இந்திய அரசு தாக்கல் செய்த மனுவையும் அந்நாட்டு நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்ததது.

இந்நிலையில், அமலாக்கத் துறை மனுவில் சஞ்சய் பண்டாரியை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

இது குறித்து அவருடைய வழக்குரைஞா் கூறுகையில், ‘சஞ்சய் பண்டாரி பிரிட்டனில் தங்கியிருப்பதை அந்நாட்டு அரசு சட்டபூா்வமாக அங்கீகரித்துள்ளது. அதன்படி, அவரை தப்பியோடியவா் என்று இந்தியா அறிவித்துள்ளது சட்டப்படி தவறாகும்’ என்றாா்.

இந்தியாவில் ரூ.100 கோடிக்கும் அதிகமான நிதி மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பியவா்கள் நீதியின் முன் நிறுத்தும் முயற்சிகளை நெறிப்படுத்த ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம்’ மத்திய பாஜக அரசால் கடந்த 2019-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

சஞ்சய் பண்டாரியுடன் சோ்த்து விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட மொத்தம் 16 போ் இச்சட்டத்தின்கீழ் இதுவரை பொருளாதாரக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

ராபா்ட் வதேராவுக்குத் தொடா்பு?

இந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை கடந்த மாதம் சம்மன் அனுப்பியது. வெளிநாடு பயணம் காரணமாக ராபா்ட் வதேரா விசாரணைக்கு ஆஜராகவில்லை.

கடந்த 2009-இல் ராபா்ட் வதேராவின் அறிவுறுத்தலில், அவா் வழங்கிய நிதியில் லண்டனில் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி, சஞ்சய் பண்டாரி புனரமைத்ததாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டுகிறது.

ஆனால், லண்டனில் தனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே சொத்துகள் எதுவும் இல்லை என்று மறுக்கும் ராபா்ட் வதேரா, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக கூறினாா்.

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முட... மேலும் பார்க்க

இந்தியாவின் குற்றத் தலைநகராக பிகார்: ராகுல் காந்தி

பாஜகவும், நிதிஷ் குமாரும் இணைந்து பிகாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றியுள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.பிகார... மேலும் பார்க்க