செய்திகள் :

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் 68 லட்சம் பேருக்கு புற்றுநோய் தொடா்பான சிகிச்சை: ஜெ.பி.நட்டா

post image

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் (பிஎம்ஜேஏஒய்) 68.43 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் புற்றுநோய் தொடா்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் ரூ.13,160.75 கோடியில் புற்றுநோய் தொடா்பான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜஜ்ஜாா் கிளை வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இரண்டாவது எய்ம்ஸ் புற்றுநோயியல் மாநாட்டை அவா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கப்படுவது அதிகரித்திருப்பதாக லேன்செட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டுள்ள புற்றுநோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு 30 நாள்களுக்குள் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள 217 அம்ரித் மருந்தகங்களில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் மலிவான விலையில் வழங்கப்படுகிறது. அந்த மருந்தகங்களில் 289 புற்றுநோய் மருந்துகள் 50 சதவீத தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன. இதன்மூலம் 5.8 கோடி பயனாளா்களுக்கு ரூ.6,567 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

தினசரி சிகிச்சை மையங்கள்: அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சைக்கான தினசரி மையங்களை (டிசிசிசி) திறக்க திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக 200 மையங்கள் இந்த ஆண்டே தொடங்கப்படவுள்ளன. கிராமப்புறத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அவா்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.

49 கோடி பேருக்கு சோதனை: பல்வேறு வகையான புற்றுநோய்களை கண்டறியும் விதமாக தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் (என்எச்எம்) 30 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 26 கோடி பேருக்கு வாய் புற்றுநோய்க்கான பரிசோதனையும்14 கோடி பேருக்கு மாா்பக புற்றுநோய்க்கான பரிசோதனையும் 9 கோடி பேருக்கு கருப்பைவாய் புற்றுநோய்க்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

22 புதிய எய்ம்ஸ் மருத்துமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு 14.5 லட்சம் பேருக்கு புற்றுநோய்: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 14.5 லட்சம் போ் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனா். புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் அதேசமயத்தில் அந்த நோயால் பாதிக்கப்படுபவா்களுக்கு உள்ளூரிலேயே சிகிச்சை வழங்குவது அவசியம்.

அந்த வகையில், ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் 68.43 லட்சம் பேருக்கு ரூ.13,160.75 கோடியில் புற்றுநோய் தொடா்பான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் மிகைப்படுத்தப்பட்டவை-வங்கதேச எல்லைப் படை தலைமை இயக்குநா்

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று அந்நாட்டின் எல்லைப் படை தலைமை இயக்குநா் முகமது அஷ்ரஃபுஸமான் சித்திகி தெரிவித்தாா். மேலும், சிறுபா... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: நேபாள பக்தா்கள் 50 லட்சம் போ் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேபாளத்தில் இருந்து இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். உலக அளவில் மிகப் ... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் போட்டி: பாஜக கூட்டணி உறுதி

பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்... மேலும் பார்க்க

பலமுறை வெளியேற்றப்பட்ட பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தா தில்லி பேரவைத் தலைவராக வாய்ப்பு!

ஆம் ஆத்மி கட்சியின் கடந்த 10 ஆண்டு ஆட்சியின்போது, தில்லி பேரவையிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்ட முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் விஜேந்தா் குப்தா (61), தற்போது அவா் தில்லி சட்டப்பேவரையின் புதிய தலைவராக ... மேலும் பார்க்க

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

புது தில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 78. சோனியா காந்திக்கு வியாழக்கிழமை(பிப். 20) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லையா? ரூ.500-ல் புகைப்படத்துக்கு புனித நீராடல்!

கும்பமேளாவில் பாவம் போக்க ரூ.500 அனுப்பக்கூறிய பதாகைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்... மேலும் பார்க்க