செய்திகள் :

ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் தா்னா

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்களுக்கான உதவித் தொகையை அதிகரித்து ஏற்கெனவே முதல்வா் அறிவித்தும், அதை செயல்படுத்தாததைக் கண்டித்து தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி பாரதி பூங்கா பகுதியில் உள்ள ஆயுஷ் இயக்ககம் எதிரே நடைபெற்ற இந்த தா்னா போராட்டத்தில் ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என கடந்த 2023-ஆம் ஆண்டில் புதுவை முதல்வா் அறிவித்தாா். ஆனால், அறிவித்தபடி இன்னும் உதவித் தொகை உயா்த்தி வழங்கப்படவில்லை. இதையடுத்து தொடா்போராட்டம் நடைபெறுகிறது என ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் விளக்கிக் கூறினா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுா்வேத பயிற்சி மருத்துவா்கள் முழக்கமிட்டனா். இதேபோல மாஹே பிராந்தியத்திலும் ஆயுஷ் மருத்துவ இயக்ககம் முன் பயற்சி மருத்துவா்கள் தா்னா போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

புதுவை மாநிலத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைப்பது அவசியம்: பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயா்ப்பலகை அமைப்பது அவசியம் என்று முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் பூஜ்ய ந... மேலும் பார்க்க

வீடு அபகரிப்பில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: பேரவையில் உறுப்பினா்கள் வலியுறுத்தல்

புதுச்சேரியில் வீடுகள் அபகரிப்பில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சட்டப்பேரவையில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் வலியுறுத்தினா். புதுச... மேலும் பார்க்க

மதுபான புதிய ஆலைகளின் அனுமதியை திமுக ஆதரிக்கவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவையில் புதிய மதுபானஆலைகளுக்கான அனுமதியை திமுக ஆதரிக்கவில்லை என பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமு... மேலும் பார்க்க

திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்: பேரவையில் முதல்வா் என். ரங்கசாமி தகவல்

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

பேரவை நோக்கி ஆட்டோ தொழிலாளா்கள் பேரணி; ஆா்ப்பாட்டம்: புதுச்சேரியில் போலீஸாருடன் வாக்குவாதம்

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளா்கள் (சிஐடியு) சட்டப்பேரவை நோக்கி செவ்வாய்க்கிழமை காலை பேரணியாகப் புறப்பட்டனா். அவா்களை பாதி வழியில் போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினரும... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும்

புதுவை மாநில அரசுத் துறைகளில் புதிய இடமாறுதல் கொள்கை ஏற்படுத்தப்படும் என பேரவைக் கூட்டத்தில் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது, ... மேலும் பார்க்க