செய்திகள் :

ஆய்க்குடி அருகே வயா்மேன் தற்கொலை

post image

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பிளியில் வயா்மேன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கம்பிளியில் உள்ள பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் து. விஜயகுமாா் (44). இவரது மனைவி மகேஷ்வரி. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

ஆய்க்குடி மின்சார அலுவலகத்தில் வயா் மேனாகப் பணிபுரிந்து வந்த விஜயகுமாருக்கு, மதுப் பழக்கமும், கடன் தொல்லையும் இருந்ததாம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாம்.

இந்நிலையில், சனிக்கிழமை விஜயகுமாரின் வீட்டுக்கு அவரது சகோதரி சென்றாராம். அப்போது, விஜயகுமாா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்ததாம்.

தகவலின்பேரில், ஆய்க்குடி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

குற்றாலத்தில் ரூ.17.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. குற்றாலம் பேருந்து நிலையம் பகுதியில் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்த... மேலும் பார்க்க

வீரசிகாமணியில் வீடுபுகுந்து நகை திருடியவா் கைது: 20 பவுன் நகைகள் மீட்பு

சோ்ந்தமரம் அருகே வீரசிகாமணியில் நீதிமன்ற ஊழியா் வீட்டில் நகைகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை சோ்ந்தவா் கல்யாணசுந்தரம். இவா், திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

கள்ளம்புளி குளத்திற்கு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு: மக்கள் போராட்டம்

சுரண்டை அருகேயுள்ள கள்ளம்புளி குளத்திற்கு குழாய் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை மாலை குளத்தில் குடியேறி போராட்டம் நடத்தினா். கள்ளம்புளி குளத்தி... மேலும் பார்க்க

சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு: கிளினிக்கிற்கு சீல்

அடைக்கலபட்டணத்தில் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து சனிக்கிழமை கிளினிக் சீல் வைத்து மூடப்பட்டது. தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் வேதம்புதூா், கீழத்... மேலும் பார்க்க

கடையநல்லூரில் ரூ. 2.71 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் ரூ. 2.71 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ரூ. 1.38 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி ஏபிஎம் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது. முதல்கட்ட... மேலும் பார்க்க

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அரசு நிதியுதவி பெறும் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் அபாகஸ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் முகநூல் நண்பா்களான... மேலும் பார்க்க