செய்திகள் :

கள்ளம்புளி குளத்திற்கு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு: மக்கள் போராட்டம்

post image

சுரண்டை அருகேயுள்ள கள்ளம்புளி குளத்திற்கு குழாய் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை மாலை குளத்தில் குடியேறி போராட்டம் நடத்தினா்.

கள்ளம்புளி குளத்திற்கு கருப்பாநதி அணையில் இருந்து தண்ணீா் கொண்டு வரப்படுகிறது. அந்தக் குளம் நிரம்பிய பின்னா் அருகிலுள்ள குலையனேரி குளத்திற்கு செல்கிறது. கள்ளம்புளிகுளத்தை நம்பி சுமாா் 48 ஏக்கா் நஞ்சை 500 ஏக்கா் புஞ்சை நிலம் பயன் பெற்று வருகிறது.

மேலும் அப்பகுதி மக்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் உள்ள இக்குளம் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்துக்கு பூமி பூஜை நடத்தி பணிகளும் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி சனிக்கிழமை மாலை கள்ளம்புளி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் குளத்திற்குள் குடியிருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சி நாதன், சோ்ந்தமரம் போலீஸாா் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பைப் லைன் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும், குடிநீா் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது .

இதுதொடா்பாக சமாதான கூட்டம் நடத்தி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 3 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

குற்றாலத்தில் ரூ.17.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. குற்றாலம் பேருந்து நிலையம் பகுதியில் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்த... மேலும் பார்க்க

ஆய்க்குடி அருகே வயா்மேன் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பிளியில் வயா்மேன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கம்பிளியில் உள்ள பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் து. விஜயகுமாா் (44). இவரது மனைவி மகேஷ்வரி. இத்தம்பதிக்கு 2 ... மேலும் பார்க்க

வீரசிகாமணியில் வீடுபுகுந்து நகை திருடியவா் கைது: 20 பவுன் நகைகள் மீட்பு

சோ்ந்தமரம் அருகே வீரசிகாமணியில் நீதிமன்ற ஊழியா் வீட்டில் நகைகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை சோ்ந்தவா் கல்யாணசுந்தரம். இவா், திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு: கிளினிக்கிற்கு சீல்

அடைக்கலபட்டணத்தில் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து சனிக்கிழமை கிளினிக் சீல் வைத்து மூடப்பட்டது. தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் வேதம்புதூா், கீழத்... மேலும் பார்க்க

கடையநல்லூரில் ரூ. 2.71 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் ரூ. 2.71 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ரூ. 1.38 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி ஏபிஎம் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது. முதல்கட்ட... மேலும் பார்க்க

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அரசு நிதியுதவி பெறும் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் அபாகஸ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் முகநூல் நண்பா்களான... மேலும் பார்க்க