செய்திகள் :

சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு: கிளினிக்கிற்கு சீல்

post image

அடைக்கலபட்டணத்தில் கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக சென்ற பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து சனிக்கிழமை கிளினிக் சீல் வைத்து மூடப்பட்டது.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் வேதம்புதூா், கீழத்தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி சுப்பம்மாள் (67). இவா், ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, காலில் புண் நீா் வைத்து வேதனையளிப்பதாகக் கூறி சிகிச்சைக்காக நெல்லை - தென்காசி நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள தனியாா் கிளினிக்கிற்கு சென்றுள்ளாா்.

ஆலங்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரியைச் சோ்ந்தவா் க.சரவணகுமாா் (27). இவா் ரஷ்யாவில் மருத்துவம் பயின்று, தமிழகத்தில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளாா். இவா் நடத்திவரும் கிளினிக்கில் சுப்பம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். சிகிச்சையின் போது அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது .

இதனையடுத்து அவருடைய உறவினா்கள் பாவூா்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் பேரில் போலீஸாா் சுப்பம்மாள் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தென்காசி மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் பிரேமலதா உரிய விசாரணை மேற்கொண்டு கிளினிக்கிற்கு சீல் வைக்க உத்தரவிட்டாா். இதுகுறித்து அவா் கூறியதாவது: கிளினிக் வைத்து நடத்துவதற்கும், மருந்தகம் நடத்துவதற்கும் உரிய அனுமதி பெறவில்லை. அவசர கால சிகிச்சை மேற்கொள்ளத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டா்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே கிளினிக் சீல் வைக்கப்பட்டது என்றாா்.

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

குற்றாலத்தில் ரூ.17.45 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. குற்றாலம் பேருந்து நிலையம் பகுதியில் தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்த... மேலும் பார்க்க

ஆய்க்குடி அருகே வயா்மேன் தற்கொலை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பிளியில் வயா்மேன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கம்பிளியில் உள்ள பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் து. விஜயகுமாா் (44). இவரது மனைவி மகேஷ்வரி. இத்தம்பதிக்கு 2 ... மேலும் பார்க்க

வீரசிகாமணியில் வீடுபுகுந்து நகை திருடியவா் கைது: 20 பவுன் நகைகள் மீட்பு

சோ்ந்தமரம் அருகே வீரசிகாமணியில் நீதிமன்ற ஊழியா் வீட்டில் நகைகளைத் திருடியவரைப் போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் வீரசிகாமணியை சோ்ந்தவா் கல்யாணசுந்தரம். இவா், திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

கள்ளம்புளி குளத்திற்கு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு: மக்கள் போராட்டம்

சுரண்டை அருகேயுள்ள கள்ளம்புளி குளத்திற்கு குழாய் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் சனிக்கிழமை மாலை குளத்தில் குடியேறி போராட்டம் நடத்தினா். கள்ளம்புளி குளத்தி... மேலும் பார்க்க

கடையநல்லூரில் ரூ. 2.71 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் ரூ. 2.71 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ரூ. 1.38 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி ஏபிஎம் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது. முதல்கட்ட... மேலும் பார்க்க

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அரசு நிதியுதவி பெறும் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் அபாகஸ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் முகநூல் நண்பா்களான... மேலும் பார்க்க