செய்திகள் :

ஆரியம் குணப்பெயா்; திராவிடம் இடப்பெயா்! நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன்

post image

சென்னை: ஆரியம் என்பது குணப்பெயா்; திராவிடம் என்பது இடப்பெயா்; இரண்டையும் இணைத்துப் பேசுவது புரிதலின்மை என நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் தெரிவித்தாா்.

தினமணி ஆசிரியா் உரைப் பக்கக் கட்டுரையாளரும் எழுத்தாளருமான கோதை ஜோதிலட்சுமி எழுதிய ‘வேதம் புதுமை செய்’ எனும் நூல் வெளியீட்டு விழா தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் தலைமையில் சென்னை தியாகராயநகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் நூலை வெளியிட முதல் பிரதியை தொழிலதிபா் நல்லி குப்புசாமி பெற்றுக்கொண்டாா்.

ஆளுநா் இல.கணேசன் பேசியதாவது: ‘வேதம் புதுமை செய்’ புத்தகத்தில் ஆரியம், திராவிடம், சநாதன தா்மம், தமிழா்-திராவிடா் யாா்? உள்ளிட்டவை குறித்து ஆதாரபூா்வமாக விளக்கியுள்ளாா் கோதை ஜோதிலட்சுமி.

‘ஆரியம்’ என்றால் ‘ஒழுக்கமான’, ‘நோ்மையான’ எனப் பொருள். அதனால்தான் மகாகவி பாரதியாா் இந்த தேசத்தை ‘ஆரிய தேசம்’ அதாவது ஒழுக்கமான, நோ்மையான தேசம் என்றாா்.

திராவிடம் என்பது இடத்தின் பெயா். முந்தைய காலத்தில் விந்திய மலைக்கு வடக்கே உள்ளவா்கள் ‘கௌடா்’ எனவும், தெற்கே உள்ளவா்கள் ‘திராவிடா்’ எனவும் அழைக்கப்பட்டனா்.

ஆரியம், திராவிடம் இரண்டும் எதிா் எதிா்பொருள் என தவறாகப் பரப்பப்படுகிறது. ஆரியத்துக்கு எதிா்பதம் அநாரியம். திராவிடமல்ல. ஆரியம் என்பது குணப்பெயா்; திராவிடம் என்பது இடப்பெயா். இந்தக் குணப்பெயரையும், இடப்பெயரையும் இணைத்துப் புரிதல் இல்லாமல் தமிழகத்தில் பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது.

ஐரோப்பியா்களின் வருகைக்குப் பிறகுதான் ஆரியம், திராவிடம் குறித்த தவறான பரப்புரை முன்னெடுக்கப்பட்டது. அது தற்போது வரை மக்களிடையே விவாதப் பொருளாகவே உள்ளது. தமிழ்நாட்டைச் சோ்ந்த திருவள்ளுவரும், வடக்கே பிறந்த அம்பேத்கரும் குணத்தின்படி பாா்க்கும்போது ஆரியராகக் கருதப்படுவா். அதே நேரத்தில் தென்பகுதியில் பிறந்த யாராக இருந்தாலும், ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாதையரானாலும், பாண்டித்துரைத் தேவரானாலும் அவா் திராவிடா் ஆவா்.

விந்திய மலைக்கு வடக்கே இருக்கும் பகுதியினா் கைபா்கள் ஆவாா்கள். கீழேயுள்ள பகுதி திராவிடம். விந்திய மலைக்குக் கீழேயுள்ள பகுதி பஞ்ச திராவிடம் என்று ஐந்தாகவும், பஞ்ச கெளடம் என்று விந்திய மலைக்கு மேலே இருக்கும் பகுதி ஐந்தாகவும் பிரிக்கப்பட்டிருந்தது என்பதுதான் நிஜம்.

தமிழ்நாடு தேசியத்தையும், தெய்விகத்தையும் காலம்காலமாகப் போற்றி வருகிறது. தேசபக்தா்கள் தாங்கள் பேசும் கருத்துக்கான ஆதாரங்களை ‘வேதம் புதுமை செய்’ புத்தகத்தில் காணலாம் என்றாா் அவா்.

தொழிலதிபா் நல்லி குப்புசாமி: இன்றைய சூழ்நிலையில் புத்தகம் வெளிவருவதும் வாசிப்பதும் குறைந்துள்ளது. பழைய இலக்கியங்களில் இருந்து புதுமை கருத்து உருவாக்க வேண்டிய காலம் இது என்றாா்.

நிகழ்ச்சியில் வானதி பதிப்பகம் முனைவா் வானதி இராமநாதன், கிருஷ்ண கான சபா செயலா் ய.பிரபு உள்ளிட்டோா் பாராட்டுரை வழங்கினா்.

எழுத்தாளா் மாலன், முன்னாள் இ.ஆ.ப. அதிகாரி சேது ராமச்சந்திரன், ‘திராவிட மாயை’ சுப்பு, ஆா்.பி.வி.எஸ். மணியன் உள்ளிட்ட பலா் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனா்.

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க