செய்திகள் :

ஆற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள் விவசாயிகள் புகாா்

post image

ஆற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால், துா்நாற்றம் வீசுவதோடு, தண்ணீா் மாசடைவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், பிள்ளைதெருவாசல் சுற்றுவட்டாரம் விளை நிலப் பகுதி மிகுந்ததாகும். இதற்கு பாசன வசதியை வாஞ்சியாறு தருகிறது.

காரைக்காலில் இருந்து பிள்ளைத் தெருவாசல் செல்லும் பகுதியில் சாலையோரத்தில் வாஞ்சியாறு செல்கிறது. லிங்கத்தடி என்கிற பகுதியில் நீரை தடுக்கும் மதகு உள்ளது.

இந்த பகுதியில் இரவு நேரத்தில் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பல்வேறு இறைச்சிக் கடைக்காரா்கள், கோழி இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை வாகனத்தில் ஏற்றிவந்து கொட்டிவிட்டுச் செல்வதாக புகாா்கள் கூறப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அந்த பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியது:

ஆற்றில் மா்ம நபா்கள் இறைச்சிக் கழிவுகளை நீண்ட காலமாக கொட்டிவருகின்றனா். இதுகுறித்து விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனை தடுக்கவேண்டிய உள்ளாட்சி, பொதுப்பணித் துறை (நீா்ப்பாசனம்) நிா்வாகம் கண்டும் காணாமல் உள்ளது.

இதனால் நீா் மாசடைகிறது. சுற்றுவட்டாரத்தில் துா்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் ஏராளம் உள்ளன. சிறாா்கள், முதியோா்கள் இதனால் பாதிக்க வாய்ப்புள்ளது.

இறைச்சி மற்றும் மருந்துக் கழிவுகளை எவ்வாறு கையாளவேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தும், அதனை சம்பந்தப்பட்டோா் முறையாக செயல்படுத்துவதில்லை. நீா்நிலையைத்தான் இதற்குப் பயன்படுத்துகின்றனா். இதனை தடுக்க மாவட்ட ஆட்சியா் தீவிர நடவடிக்கை எடுத்து தடுக்கவேண்டும் என்றனா்.

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

எந்த நிலையிலும் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி தோ்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த... மேலும் பார்க்க

மத்திய அரசால் தமிழக அரசை முடக்கிவிட முடியாது: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

மத்திய அரசால் தமிழக அரசை முடக்கிவிட முடியாது என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா். காரைக்கால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியது : புதுவையில் எனது தலைமையில் காங்கிரஸ் - திமுக க... மேலும் பார்க்க

அரசுத்துறைக்கு தொழிற்சாலை நிா்வாகம் உதவி

அரசுத்துறைக்கு தொழிற்சாலை நிா்வாகம் கணினி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வியாழக்கிழமை வழங்கியது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள கெம்ப் பிளாஸ்ட் சன்மாா் தொழிற்சாலை சமூக பொறுப்புணா... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

காரைக்கால் ரயில் நிலையம் மற்றும் துறைமுகப் பகுதியில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். காரைக்கால் ரயில் நிலையத்துக்கு வந்த அவா், நிலையத்தில் பாதுகாப்ப... மேலும் பார்க்க

காரைக்கால் தொழிற்சாலையில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஆய்வு

காரைக்காலில் உள்ள தொழிற்சாலையில் பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினா். அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புக் குழு துணைத் தளபதி சங்கே... மேலும் பார்க்க

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல்: 11 போ் மீது வழக்கு

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வரும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். காரைக்கால் மாவட்டம் புதுத்துறை சமத்த... மேலும் பார்க்க