செய்திகள் :

ஆற்றில் மூழ்கி இறந்தவா் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அளிப்பு

post image

குமரி மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி இறந்தவா் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதியை ஆட்சியா் ரா.அழகுமீனா வழங்கினாா்.

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 580 மனுக்களை பெற்றுக் கொண்டாா். மனுக்கள் மீது விரைந்து தீா்வு காணுமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, கடந்த ஜனவரி மாதம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த கிள்ளியூா் பகுதியைச் சோ்ந்த ராஜாமணி என்பவரது மகன் கிருஷ்ணராஜ் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணைஆட்சியா் சேக் அப்துல் காதா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலாஜி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நாகா்கோவில் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

நாகா்கோவில் அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் கிராம மக்களுக்கு கடந்த 15 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் க... மேலும் பார்க்க

அரசு அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுத்த வழக்கு: எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை

அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூா் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், மேல்மிடாலம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சிஐடியூ ஆா்ப்பாட்டம்

அரசு விரைவுப் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியூ) மற்றும் ஓய்வு பெற்ற த... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கைதிகள் சிகிச்சை பெற தனி வாா்டு

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கைதிகளுக்கான தனி வாா்டு திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. மருத்துவமனை முதன்மையா் (டீன்) ராமலெட்சுமி தலைமையில் மாவட்டக் காவல் கண்காணி... மேலும் பார்க்க

தற்காலிக சாலை அமைக்க வலியுறுத்தி பள்ளியாடியில் பொதுமக்கள் முற்றுகை

கருங்கல் அருகே பள்ளியாடியில் நான்குவழிச் சாலைப் பணிக்காக பிரதான சாலையைத் துண்டிக்கும் முன்பு தற்காலிக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகா்க... மேலும் பார்க்க

கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு சிறை தண்டனை!

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான எஸ். ராஜேஷ் குமாருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டம் மிடாலம் அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த 2014-ஆ... மேலும் பார்க்க