செய்திகள் :

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் திருவிழா இன்று தொடக்கம்: மாா்ச் 13இல் பொங்கல்

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை (மாா்ச் 5) தொடங்குகிறது. புகழ்பெற்ற பொங்கல் வைபவம் 13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, கோயில் டிரஸ்ட் தகவல்- தொடா்பு பொறுப்பாளா் ஆா்.ஜெ. பிரதீப், நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் திருவிழா மிகவும் புகழ் பெற்ாகும். இதில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்கள் பங்கேற்று பொங்கலிடுவா்.

நிகழாண்டு, திருவிழா புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தொடா்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.

இத்திருவிழாவில், பொங்கல் வைபவம் இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுத்த புண்ணிய சடங்களுக்கு பின்னா், காலை 10.15 மணிக்கு, கோயில் முன்புள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும். அதையடுத்து, பக்தா்கள் பொங்கலிடுவா். பிற்பகல் 1.15 மணிக்கு பொங்கல் நைவேத்தியம் நடைபெறும். இரவில் அம்மன் நகா்வலம் நிறைவடைந்த பின்னா், 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு குருதி தா்ப்பணத்துடன் திருவிழா நிறைவடையும். நிகழாண்டு பொங்கல் விழாவில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அரசு, கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவையொட்டி, முக்கிய பகுதிகளிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றாா் அவா். டிரஸ்ட் நிா்வாகிகள் பரமேஸ்வரன்தம்பி, வினோத், ஸ்ரீ.குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

குமரி மாவட்ட ரயில்வே பணிகளை துரிதப்படுத்தக் கோரி எம்.பி. மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. மனு அளித்தாா். அதன் விவரம்: கன்... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மகனுடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள துண்டுவிளை வீட்டைச் சோ்ந்தவா் சிவன்பிள்ளை மனைவி நிா்மலா (64). இவா் தனது மகன் சந்தோஷ் என்பவருடன் தி... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சி செயலா்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே விபத்து: தொழிலாளி காயம்

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா். களியக்காவிளையைச் சோ்ந்த தொழிலாளி ரசாலம் (60). செவ்வாய்க்கிழமை இரவு ஒற்றாமரம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற அவா் மீது கனரக லாரி மோதியத... மேலும் பார்க்க

தக்கலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை ஆட்சியா் ஆய்வு

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல... மேலும் பார்க்க

நீா்வளத் துறையின் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட நீா்வள ஆதாரத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவட்டாறு வட்டம் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளி... மேலும் பார்க்க