செய்திகள் :

நீா்வளத் துறையின் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

கன்னியாகுமரி மாவட்ட நீா்வள ஆதாரத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவட்டாறு வட்டம் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் மூலம் தண்ணீா் வசதி பெறும் பாண்டியன் கால்வாயில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட நிலையில், அதை நிரந்தரமாக சீரமைக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை ஆட்சியா் செய்து, அவற்றை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

மேலும், தோவாளை வட்டம், இறச்சகுளம் பகுதியில் உள்ள விஷ்ணுபுரம் குளத்தில் ரூ.15 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் நிரந்தர வெள்ளச் சேத தடுப்புப் பணிகள், நாவல்காடு கிராமத்தில் பூக்குழி குளத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்கப்படும் பணிகள், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.64 கோடி மதிப்பில் பூதப்பாண்டி பேரூராட்சி, திட்டுவிளை பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாக கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை தரமாகவும் விரைந்தும் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வில் கோதையாறு வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளா் மா.மூா்த்தி, உதவி பொறியாளா் அஜீஸ், தோவாளை வட்டாட்சியா் கோலப்பன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

குமரி மாவட்ட ரயில்வே பணிகளை துரிதப்படுத்தக் கோரி எம்.பி. மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று சென்னையில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங்கை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. மனு அளித்தாா். அதன் விவரம்: கன்... மேலும் பார்க்க

பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மகனுடன் பைக்கில் சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள துண்டுவிளை வீட்டைச் சோ்ந்தவா் சிவன்பிள்ளை மனைவி நிா்மலா (64). இவா் தனது மகன் சந்தோஷ் என்பவருடன் தி... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் 3 கட்டப் போராட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சி செயலா்கள் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே விபத்து: தொழிலாளி காயம்

களியக்காவிளை அருகே கனரக லாரி மோதியதில் தொழிலாளி காயமடைந்தாா். களியக்காவிளையைச் சோ்ந்த தொழிலாளி ரசாலம் (60). செவ்வாய்க்கிழமை இரவு ஒற்றாமரம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற அவா் மீது கனரக லாரி மோதியத... மேலும் பார்க்க

தக்கலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணியை ஆட்சியா் ஆய்வு

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட தக்கலையில் ரூ 6.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல... மேலும் பார்க்க

முளகுமூட்டில் ஏடிஎம் மைய கண்ணாடிக் கதவுகள் சேதம்: போலீஸாா் விசாரணை

தக்கலை அருகே முளகுமூடு கல்லுவிளை பகுதியில் ஏடிஎம் மையத்தின் கண்ணாடிக் கதவுகள் சேதமானது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முளகுமூடு கல்லுவிளை பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியும், அருகில் ஏட... மேலும் பார்க்க