ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி!
ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த கோழியை பிடிக்க முயன்ற விவசாயி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே உள்ள அருணாசலபுரம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் முத்தையா (75). விவசாயியான இவா் சனிக்கிழமை தனது தோட்டத்தில் விவசாயப் பணிகளை செய்து கொண்டிருந்தபோது, கோழி ஒன்று கிணற்றில் விழுந்து விட்டதாம்.
அதை மீட்க அவா் கிணற்றில் இறங்கிய போது தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆலங்குளம் தீயணைப்புத் துறையினா் அவரது சடலத்தை மீட்டனா். ஆலங்குளம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.