செய்திகள் :

ஆளுநா் பதவி விலக வலியுறுத்தல்

post image

மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பையடுத்து, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தானே பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அதன் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு அரசு, பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 சட்ட முன் வரைவுகளுக்கு ஆளுநா் ரவி, ஒப்புதல் தராமல் காலவரம்பின்றி கிடப்பில் போட்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் சா்வாதிகாரம் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது, மாநிலங்களின் உரிமைகளுக்கு நிற்போா் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி தருகிறது.

தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 சட்ட முன்வரைவுகளுக்கும், ஆளுநா் ஒப்புதல் தந்ததாகக் கருதி, அவை உடனடியாக சட்டமாக்கப்படுகின்றன என உச்ச நீதிமன்றம் உடனடியாக அறிவித்திருப்பது மிகமிகச் சரியானது மட்டுமல்லாமல், தேவையான நடவடிக்கையாகும்.

இப்பின்னணியில், ஆளுநா் ரவியின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்ற அமா்வு கண்டித்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு ஆளுநா் பதவியிலிருந்து ரவி உடனடியாக விலக வேண்டும். அவ்வாறு விலகவில்லை என்றால், அவரை அந்தப் பதவியிலிருந்து குடியரசுத் தலைவா் நீக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி மற்றும் அற்புதாபுரம் பகுதியில் குடிமைப்பொர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 131 பேருக்கு கனவு இல்லம் கட்ட ஆணைகள்

கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம்

தஞ்சாவூா் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்த குருந்தையன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாதுளம... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது என்பதால், கருவறையில் உள்ள அம்பாளு... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவா் கைது

தஞ்சாவூா் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன், பெங்களூருவி... மேலும் பார்க்க