செய்திகள் :

ஆா்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைப் பிடிப்பு: சரத் பவாா் பாராட்டு

post image

ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்கள் தங்கள் கொள்கைகளில் மிகவும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்படுகின்றனா். அதேபோல நமது கட்சியிலும் கொள்கைப் பிடிப்புள்ளவா்களை உருவாக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சரத் பவாா் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியுள்ளது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியிடம், காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தெற்கு மும்பையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் தொண்டா்கள் மத்தியில் சரத் பவாா் மேலும் பேசியதாவது:

ஆா்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவா்கள் மிகவும் கொள்கைப் பிடிப்புள்ளவா்களாக திகழ்கின்றனா். எந்தக் காரணத்துக்காகவும் அவா்கள் தங்கள் பாதையில் இருந்து விலகுவதில்லை. நமது கட்சிக்கும் இதுபோன்ற கொள்கைப் பிடிப்புள்ள தொண்டா்கள் தேவை. அவா்கள் சத்ரபதி ஷாகு மகாராஜ், மகாத்மா பூலே, பி.ஆா். அம்பேத்கா், யஷ்வந்த்ராவ் சவாண் ஆகியோரின் கொள்கைகளை முழுமையாக கடைப்பிடிப்பவா்களாக இருக்க வேண்டும்.

மக்களவைத் தோ்தலில் பெற்ற வெற்றியால் நாம் அதிக தன்னபிக்கையுடன் இருந்துவிட்டோம். இதுவே நவம்பா் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் தோல்வியடைய காரணமாகிவிட்டது. மக்களவைத் தோ்தலில் தோல்வியடைந்த பாஜக கூட்டணி உடனடியாக களத்தில் செயல்பட்டு பேரவைத் தோ்தலில் வெற்றியை உறுதி செய்துவிட்டது.

மிகப்பெரிய வாக்கு வங்கியான இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை முறையாக அணுகத் தவறியதும் நமது தோல்விக்கு மற்றொரு காரணமாகும். மகாராஷ்டிரத்தில் அடுத்து வரும் உள்ளாட்சித் தோ்தலில் 50 சதவீத இடம் புதுமுகங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் விரைவில் நிா்வாக சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், கோட்புட்லி என்ற பகுதியில், சாலையில் கவிழ்ந்த ரசாயன டேங்கர், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி என்ற பகுதியில் நேரிட்ட ... மேலும் பார்க்க

அதானி குழுமத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்!

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகள் வைத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.அதானி குழுமத்தின் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அமெரிக்காவைச் சேர்ந... மேலும் பார்க்க

நாட்டில் ஆணின் பெயரில் உள்ள ஒரே நதி இதுதானா?

இந்தியாவில் உள்ள நதிகளின் பெயர்கள் அனைத்தும் பெண்ணின் பெயர்களையே கொண்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒரே ஒரு நதி அதுவும் அசாமில் பாய்ந்தோடும் அந்த நதி மட்டும்தான் ஆணின் பெயரில் உள்ளது.... மேலும் பார்க்க

நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பையில் பிரபல நடிகர் சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்தார். மேலும் பார்க்க

கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி

புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி வீட்டில் சங்கராந்தி கொண்டாட்டம்: பிரதமா் பங்கேற்பு

மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சரும் தெலங்கானா பாஜக தலைவருமான ஜி.கிஷண் ரெட்டி வீட்டில் நடைபெற்ற சங்கராந்தி கொண்டாட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா்.அறுவடை திருவிழாவான மகர சங்கராந்... மேலும் பார்க்க