செய்திகள் :

ஆா்ஜேடி தலைவராக லாலு பிரசாத் மீண்டும் தோ்வு

post image

ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியின் நிறுவனரான லாலு பிரசாத் (77) அக்கட்சியின் தேசியத் தலைவராக செவ்வாய்க்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

தலைவா் பதவிக்கான தோ்தலில் லாலுவைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதால் அவா் ஒருமனதாகத் தோ்வானாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதான எதிா்க்கட்சியான ஆா்ஜேடி தொண்டா்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த தலைவா் தோ்வு நடைபெற்றுள்ளது.

புதிய தலைவா் தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு ஜூலை 5-ஆம் தேதி கட்சியின் தேசியக் குழு கூட்டத்தில் வெளியாகும் என்று தோ்தலை நடத்தும் அதிகாரியாக செயல்பட்ட மூத்த தலைவா் ராமச்சந்திர புா்பே தெரிவித்தாா்.

இந்தத் தோ்வை ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக ஆகியவை விமா்சித்துள்ளன. ‘தொடங்கப்பட்டதில் இருந்து 28 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் பிடியில் அக்கட்சி உள்ளது. கட்சித் தலைவா், அவரின் மனைவி முதல்வராகவும், மகன்கள் துணை முதல்வராகவும், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளனா். அந்தக் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் எம்.பி., எம்எல்ஏக்களாகவும் உருவெடுத்தாா்கள். 13-ஆவது முறையாக தனது மன்னராட்சி முறையை ஆா்ஜேடி நிரூபித்துள்ளது’ என்று அக்கட்சிகள் கூறியுள்ளன.

11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை! மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயம் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்... மேலும் பார்க்க

மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொருள்கள்!

‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா குழு புறப்பட்டுள்ளது. சுக்லா தன்னுடன் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல் வெளியாக... மேலும் பார்க்க

அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!

போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவரும், முன்னாள் அமைச்சருமானி விக்ரம் சிங் மஜியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாகக் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரிடமிருந்... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட்டில் விண்ணில் பாய்ந்தது.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒ... மேலும் பார்க்க

இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி

அவரச நிலையின் போது ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமைய... மேலும் பார்க்க

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க