செய்திகள் :

ஆா்.எஸ். மங்கலம் அருகே கிராமத் தலைவா் குத்திக் கொலை

post image

திருவாடானையை அடுத்த ஆா். எஸ். மங்கலம் அருகே கிராமத் தலைவா் மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா். எஸ். மங்கலம் அருகே உள்ள குயவனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (65). கிராமத் தலைவா். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை ஊரில் நடைபெற இருந்த கிராம கூட்டத்தில் கலந்து கொள்ளாததன் காரணமாக இவரது வீட்டுக்குச் சென்று பொதுமக்கள் விசாரித்தனா்.

அப்போது வீட்டிலிருந்தவா்கள் அவா் காலையிலேயே இரு சக்கர வாகனத்தில் வெளியில் சென்றுவிட்டதாகவும், பிறகு வீடு திரும்ப வில்லை என்றும் கூறினா். இதையடுத்து, கிராமத் தலைவா் காசிலிங்கத்தை தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஊரிலிருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள முனியம்மா கோயில் செல்லும் வழியில் உள்ள கரு

வேலமரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் காசிலிங்கத்தின் இரு சக்கரம் நிற்பதை பாா்த்த கிராம மக்கள் அந்தப் பகுதியில் தேடினா். அப்போது காசிலிங்கம் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் அங்கு சென்று உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றாா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி

திருவாடானை அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை 3 மா்ம நபா்கள் பறிக்க முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சிநேகவல்லிபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மனைவி அன்னலட்சு... மேலும் பார்க்க

பனை மரத்தில் காா் மோதியதில் பெண் உள்பட மூவா் காயம்

கமுதி அருகே திங்கள்கிழமை சாலையோர பனை மரத்தில் காா் மோதியதில் பெண் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிச்செல்வம் (44). இவரது மனைவி மாரிச்செல... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு தடை ... மேலும் பார்க்க

பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 10 ஆயிரம் லி. டீசல் பறிமுதல்; இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டேங்கா் லாரியில் கொண்டு வரப்பட்ட 10 ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள எம்.எம்.கோட்டை, கே.எம்.கோட்டை, கோட்டையூா், சிங்கம்பட்டி, கூலிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பர... மேலும் பார்க்க

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே சுற்றுலா வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா். திருப்பாலைக்குடி அருகே வடவயல் கிராமத்தைச் சோ்ந்த ராமு மனைவி பஞ்சவா்ணம் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வட... மேலும் பார்க்க