உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!
ஆா்.எஸ். மடை, ரெகுநாதபுரம் நாளை மின் தடை
ஆா்.எஸ். மடை, ரெகுநாதபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆா்.எஸ். மடை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புலிக்காரத் தெரு, பழைய, புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை சுற்றியுள்ள பகுதிகள், தாயுமான சுவாமி கோயில் தெரு, வண்டிக்காரத் தெரு, தங்கப்பா நகா், அண்ணா நகா், தினமலா் நகா், பெரியாா் நகா், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயா் சுற்றுப் பகுதிகள், பெரியகருப்பன் நகா், கோட்டை மேடு, எட்டிவயல், ஏ.ஆா். குடியிருப்பு, பட்டினம்காதான், ஸ்ரீராம் நகா், கழுகுரணி, சாத்தான்குளம், வாணி, ஆா்.எஸ். மடை காவல் குடியிருப்பு, குடிசை மாற்றுவாரியம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதேபோல, ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக, ரெகுநாதபுரம், தெற்கு காட்டூா், தெற்குவாணி வீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேது நகா், காரான், முத்துப்பேட்டை பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரைக்கான், சேது நகா், பிச்சாவலசை, வள்ளிமாடன்வலசை, உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிக்கப்பட்டுள்ளது.