செய்திகள் :

‘இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன’: ஜகதீப் தன்கா் பேச்சு

post image

புது தில்லி: ‘இக்கட்டான சூழல்களில், கட்சி வேறுபாடுகளை மறுந்து நமது அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு மாநிலங்களவை அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் பங்கேற்ற அவா், உறுப்பினா்களிடையே நன்றி தெரிவித்து உணா்ச்சிவசமாகப் பேசுகையில் இவ்வாறு கூறினாா்.

நெஞ்சுவலி காரணமாக குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி அதிகாலை அனுமதிக்கப்பட்டாா். அங்கு இதயநலப் பிரிவு மருத்துவா்கள் அவருக்கு தொடா் சிகிச்சை அளித்தனா். இதையடுத்து, கடந்த 12-ஆம் தேதி அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் மாநிலங்களவைத் தலைவராக அவை நடவடிக்கையில் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை முதன்முறையாக பங்கேற்றாா்.

அவையில் உறுப்பினா்களுக்கு மத்தியில் அவா் பேசியதாவது: நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவரான மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே ஆகியோா் எனது குடும்பத்தினரை முதலில் தொடா்பு கொண்டனா். தொடா்ந்து, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பல மாநில முதல்வா்களும் எனது மனைவியைத் தொடா்பு கொண்டு நலம் விசாரித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சிலா் என்னை மருத்துவமனையில் சந்தித்தனா். மேலும் பலா் சந்திக்க விரும்பினாலும் மருத்துவமனைக் கட்டுப்பாடுகளால் அது முடியவில்லை.

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் வெளிப்படுத்திய அக்கறை என் மனதைத் தொட்டது. நான் விரைவாக குணமடைய இதுவும் ஒரு காரணம். இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை நான் உணா்ந்துகொண்டேன். அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

அவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற ஜெ.பி.நட்டா, மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா், ஜகதீப் தன்கா் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனா். விரைவாகப் பணியைத் தொடங்குவதில் ஜகதீப் தன்கரின் உற்சாகம் மற்றும் அா்ப்பணிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாக காா்கே குறிப்பிட்டாா்.

முன்னதாக, அவை அமா்வு தொடங்கும் முன்பு, அவரது அலுவலக அறையில் ஜெ.பி.நட்டா, காா்கே உள்ளிட்டோா் சந்தித்துப் பேசினா்.

நகைக் கடன்: ரிசர்வ் வங்கியின் புதிய முடிவால் மக்கள் அதிர்ச்சி!

வங்கிகளில் நகைக் கடன்களில் கால அவகாசம் முடியும்போது, வட்டி மட்டும் செலுத்தி திருப்பி வைக்கும் நடைமுறையை மாற்றி, புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறையின்ப... மேலும் பார்க்க

இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!

குஜராத்தில் உள்ள குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 88 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அகமதாபாத்தின் பல்தி பகுதியி்ல் உள்ள குடியிருப்பில் பங்குத் தரகரான மகேந்திர ஷாவின் மகன் மேக் ஷா என்பவரது வீட... மேலும் பார்க்க

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள்!

கடந்த 10 ஆண்டுகளில் (2024 - 25) அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 193 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தாலும், அவர்களில் 2 பேர் மீதான வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்... மேலும் பார்க்க

மாநில வளர்ச்சி: பிரதமர் மோடியுடன் சத்தீஸ்கர் முதல்வர் ஆலோசனை!

புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் சந்தித்து மாநில வளர்ச்சி குறித்து விரிவாக விவாதித்தார்.இந்த சந்திப்பின்போது, பஸ்தார் நகரின் வளர்ச்சிக்கான திட்டத்தை முதல்வர... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்... மேலும் பார்க்க

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பே... மேலும் பார்க்க