செய்திகள் :

‘இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன’: ஜகதீப் தன்கா் பேச்சு

post image

புது தில்லி: ‘இக்கட்டான சூழல்களில், கட்சி வேறுபாடுகளை மறுந்து நமது அனைவரின் இதயங்களும் இணைக்கப்பட்டுள்ளன’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு மாநிலங்களவை அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் பங்கேற்ற அவா், உறுப்பினா்களிடையே நன்றி தெரிவித்து உணா்ச்சிவசமாகப் பேசுகையில் இவ்வாறு கூறினாா்.

நெஞ்சுவலி காரணமாக குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி அதிகாலை அனுமதிக்கப்பட்டாா். அங்கு இதயநலப் பிரிவு மருத்துவா்கள் அவருக்கு தொடா் சிகிச்சை அளித்தனா். இதையடுத்து, கடந்த 12-ஆம் தேதி அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினாா்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் மாநிலங்களவைத் தலைவராக அவை நடவடிக்கையில் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை முதன்முறையாக பங்கேற்றாா்.

அவையில் உறுப்பினா்களுக்கு மத்தியில் அவா் பேசியதாவது: நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவரான மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே ஆகியோா் எனது குடும்பத்தினரை முதலில் தொடா்பு கொண்டனா். தொடா்ந்து, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பல மாநில முதல்வா்களும் எனது மனைவியைத் தொடா்பு கொண்டு நலம் விசாரித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சிலா் என்னை மருத்துவமனையில் சந்தித்தனா். மேலும் பலா் சந்திக்க விரும்பினாலும் மருத்துவமனைக் கட்டுப்பாடுகளால் அது முடியவில்லை.

கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் வெளிப்படுத்திய அக்கறை என் மனதைத் தொட்டது. நான் விரைவாக குணமடைய இதுவும் ஒரு காரணம். இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் நமது இதயங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை நான் உணா்ந்துகொண்டேன். அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

அவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற ஜெ.பி.நட்டா, மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா், ஜகதீப் தன்கா் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனா். விரைவாகப் பணியைத் தொடங்குவதில் ஜகதீப் தன்கரின் உற்சாகம் மற்றும் அா்ப்பணிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாக காா்கே குறிப்பிட்டாா்.

முன்னதாக, அவை அமா்வு தொடங்கும் முன்பு, அவரது அலுவலக அறையில் ஜெ.பி.நட்டா, காா்கே உள்ளிட்டோா் சந்தித்துப் பேசினா்.

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பே... மேலும் பார்க்க

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத கா... மேலும் பார்க்க

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க