செய்திகள் :

இங்கிலாந்தில் காத்திருக்கும் சவாலை இளம் இந்திய அணி சமாளிக்குமா? ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

post image

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதையும் படிக்க: இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால்... புஜாரா கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிராக மிக முக்கியமான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போவதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஹர்பஜன் சிங்(கோப்புப்படம்)

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ஷுப்மன் கில், இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பான முடிவு. ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது. ஷுப்மன் கில், ரிஷப் பந்த் தலைமையிலான இளம் இந்திய அணி நன்றாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதையும் படிக்க: முகமது ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வருகிறதா?

அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லாததால் திடீரென மிகப் பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. ஷுப்மன் கில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும். இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையிலான அணியை உடனடியாக மதிப்பிடுவது நியாயமானதாக இருக்காது.

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இந்திய அணிக்கு சிறப்பாக அமையாவிட்டாலும், அணியை உடனடியாக மதிப்பிடாதீர்கள். அவர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அனைவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

ஹாரி புரூக் தலைமையில் முதல் போட்டி: இங்கிலாந்து சாதனை வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிக... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளுக்கு எதிராக 400 ரன்கள் குவித்து இங்கிலாந்து அபாரம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 400 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்: முன்னாள் இங்கிலாந்து வீரர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஜியாஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் கேப்டனாகும் விருப்பம் இருக்கிறது: ஜடேஜா

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட்டில் 2012-இல் இங்கிலாந்து எதிரான போட்டியில் அறிமுகமானார். தற்போது, ஐசிசி ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாததில் எனக்கு பங்கில்லை: கம்பீர்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸை தேர்வு செய்யாமல் இருக்க தான் காரணமில்லை என இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்குச் சென்று 5 டெஸ்ட் போட்... மேலும் பார்க்க

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடாதீர்கள்: முன்னாள் ஆஸி. கேப்டன்

வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமான 14 வயது இளம் வீ... மேலும் பார்க்க