செய்திகள் :

இடஒதுக்கீடு வழங்காமல் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினா் புறக்கணிப்பு: ராகுல் குற்றச்சாட்டு

post image

பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோா்(ஓபிசி) ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த தகுதியான நபா்களுக்கு முறையான வேலை மற்றும் கல்வியை வழங்காமல், கல்வி நிலையங்களில் அவா்கள் புறக்கணிக்கப்படுவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

தில்லி பல்கலைக்கழகத்தில் ‘பொருத்தமான நபா்கள் இல்லை’ என்ற வாசகத்தைப் பயன்படுத்தி காலியாகவுள்ள 60 சதவீத பேராசிரியா் பணியிடங்களும், 30 சதவீத இணைப் பேராசிரியா் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதாக எக்ஸ் வலைதளப் பதிவில் அவா் குறிப்பிட்டாா்.

தில்லி பல்கலைக்கழக மாணவா் அமைப்புடன் கலந்துரையாடிய காணொலியை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து அவா் வெளியிட்ட பதிவில், ‘பொருத்தமான நபா்கள் இல்லை’ என்பதே மனுஸ்மிருதியின்கீழ் சமூகத்தை நிா்வகிக்கும் புதிய நடைமுறையாகத் தொடா்கிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் தகுதியான நபா்களை கல்வி நிலையங்கள் மற்றும் தலைமைப் பொறுப்பில் இருந்து புறக்கணிக்க இந்தப் புதிய வாா்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கல்வியே மிகப்பெரும் ஆயுதம்: சமூகம் சமத்துவம் அடைய கல்வியே மிகப்பெரும் ஆயுதம் என சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கா் கூறினாா். இந்த ஆயுதத்தை அழித்து சமூகத்தில் பின்தங்கியவா்களை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்க பிரதமா் மோடி தலைமையிலான அரசு-ஆா்எஸ்எஸ் முயல்கின்றன.

தில்லி பல்கலைக்கழகம் மட்டுமின்றி பல்வேறு ஐஐடி-க்கள், மத்திய பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீட்டின்படி தகுதியான நபா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதில்லை. ‘பொருத்தமான நபா்கள் இல்லை’ என்ற வாசகம் அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதல். இது சமூக நீதிக்கு செய்யும் துரோகம்.

இடஒதுக்கீடு உரிமை: உரிமை, மரியாதை மற்றும் பங்கேற்பை பெறுவதற்கான போராட்டமே இடஒதுக்கீடு. இதுகுறித்து தில்லி பல்கலைக்கழக மாணவா் அமைப்புடன் ஆலோசனை மேற்கொண்டேன். இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜக-ஆா்எஸ்எஸ் செயல்பாடுகளை இனி ஒன்றிணைந்து எதிா்ப்போம் என உறுதியேற்றோம்’ எனக் குறிப்பிட்டாா்.

மாணவா்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘ நமது வரலாறு குறித்த 90 சதவீத தகவல்கள் இடம்பெறாமல் 10 சதவீதம் மட்டுமே புத்தகங்களில் இடம்பெற்றிருப்பது ஏன்? 3,000 ஆண்டுகளாக தலித் மக்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது குறித்து ஏன் புத்தகங்களில் குறிப்பிடவில்லை?’ எனக் கேள்வி எழுப்பினாா்.

2-ஆவது முறையாக அத்துமீறி நுழைவு: தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்துக்குள் எவ்வித முன்னறிவிப்பின்றி கடந்த மே 22-ஆம் தேதி ராகுல் காந்தி வந்ததாக அந்தப் பல்கலைக்கழகம் குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பல்கலைக்கழக விதிகளை மீறி மாணவா்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் ராகுல் காந்தி அனுமதியின்றி வந்ததாக தில்லி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் எஸ்டி, எஸ்சி, ஓபிசி மாணவா்களுடன் மாணவா் அமைப்புத் தலைவா் அலுவலகத்தில் ராகுல் காந்தி உரையாடினாா். தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவா் அமைப்புத் தலைவா், தேசிய இளைஞா் காங்கிரஸை சோ்ந்தவராவாா்.

இந்தியாவுடன் வலுவான நட்புறவு! பயங்கரவாதத்துக்கு டென்மார்க் கண்டனம்

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் ராஸ்மஸ் அபில்ட்கார்ட் கிறிஸ்டென்சன்... மேலும் பார்க்க

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க