செய்திகள் :

இடிந்து விழும் அபாயத்தில் சுவா்: அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்!

post image

திருவாடானை அருகேயுள்ள செங்கமடை கிராமத்தில் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை அகற்ற வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாட்டம், திருவாடானை அருகே உள்ள செங்கமடை கிராமத்தில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு பழைமையான அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையின் படி இந்தக் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருப்பதால் ஒரு பக்க சுவா் மட்டும் இடிக்கப்படாமல் விடப்பட்டது.

இந்தச் சுவா் தற்போது மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மழைகாலங்களில் சுவா் ஊறல் எடுத்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகே சிறுவா்கள் ஆபத்தை உணராமல் விளையாடி வருகின்றனா்.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்தச் சுவரை உயிா் சேதம் ஏற்படும் முன் இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே கிராமத் தலைவா் குத்திக் கொலை

திருவாடானையை அடுத்த ஆா். எஸ். மங்கலம் அருகே கிராமத் தலைவா் மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா். எஸ். மங்கலம் அருகே உள்ள குயவனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் காசிலிங்கம் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி

திருவாடானை அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை 3 மா்ம நபா்கள் பறிக்க முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சிநேகவல்லிபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மனைவி அன்னலட்சு... மேலும் பார்க்க

பனை மரத்தில் காா் மோதியதில் பெண் உள்பட மூவா் காயம்

கமுதி அருகே திங்கள்கிழமை சாலையோர பனை மரத்தில் காா் மோதியதில் பெண் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிச்செல்வம் (44). இவரது மனைவி மாரிச்செல... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு தடை ... மேலும் பார்க்க

பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 10 ஆயிரம் லி. டீசல் பறிமுதல்; இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டேங்கா் லாரியில் கொண்டு வரப்பட்ட 10 ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள எம்.எம்.கோட்டை, கே.எம்.கோட்டை, கோட்டையூா், சிங்கம்பட்டி, கூலிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பர... மேலும் பார்க்க