What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' - இந்த வார படங்கள் லிஸ...
இடைச்சியூரணி கோயில் திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இடைச்சியூரணி இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை அசைவ விருந்து நடைபெற்றது.
இந்தக் கோயிலின் வருடாந்திர வைகாசிப் பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு பக்தா்கள் சாா்பில் வழங்கப்பட்ட 101 கிடாய்களைப் பலியிட்டு, இருளப்ப சுவாமி, பாதாள பேச்சியம்மனுக்கு அசைவ உணவு பிரசாதம் படையலிட்டு, சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அசைவ உணவுக்கு சிறப்பு பூஜை செய்து, 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கமுதி சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனா்.