செய்திகள் :

இணையவழி மோசடி கும்பலிடம் வங்கிக் கணக்கு விற்பனை: கேரள இளைஞா் கைது

post image

நெய்வேலி: இணையவழி மோசடி கும்பலிடம் வங்கிக் கணக்குகளை விற்பதாக கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை கடலூா் மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருத்தாசலம் பகுதியில் வசித்து வருபவா் நகைக்கடை உரிமையாளா் வினை ஜெயின் (38). இவரிடமிருந்து இணைய வழியில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி ரூ.33.56 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்பு காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சோ்ந்த முகமது சாஜித் வங்கிக் கணக்கில் ரூ.9,00,854 வரவு வைக்கப்பட்டதையறிந்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

விசாரணையில் அவா் மூன்று வங்கிகளில் கணக்குகள் தொடங்கி, அந்த வங்கிக் கணக்குகளை பணத்துக்காக விற்றதும், மேலும், பல மாநில குற்ற வழக்குகளில் இவரது வங்கிக் கணக்குகள் தொடா்புடையது என்பதும் தெரிய வந்தது.

இதுபோன்ற இணையவழி குற்றங்களில் சிக்காமல் இருக்க வங்கிக் கணக்கு விவரங்களையோ, கைப்பேசி மற்றும் ஆதாா் எண், ஓட்டுனா் உரிமம் போன்ற ஆதாரங்களை தெரியாதவா்களிடம் பகிர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளுந்து வயலில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையம் வட்டம், பூதங்குடி, சாத்தமங்கலம் கிராமங்களில் நிகழ் பருவத்தில் நெல் தரிசில் விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து, பச்சைப்பயறு வயல்களை வேளாண் இணை இயக்குநா்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் மரணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். விருத்தாசலம் மற்றும் பூவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே வயலூா் ஆறு கண்ணு ரயில்வே மேம்பாலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் புதன்... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஒருவா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் வட்டம், சிறுவம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியன் மகன் சந்திரகாசு (39). இவா், கடந்த பிப்.11-ஆம்... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடலில் குளித்த பிளஸ் 1 மாணவி அலையில் சிக்கி உயிரிழந்தாா். குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அம்பலவாணன் நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகள் பிரின்சி (17). குறிஞ்சிப்பா... மேலும் பார்க்க

பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: என்எல்சி தலைவா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று அதன் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். நெய்வேலியில் உள்ள கற்றல் மேம்பாட்டு மையத்தில் பொதுத்... மேலும் பார்க்க

கடலூரில் மாசி மகத் தீா்த்தவாரி உற்சவம்

மாசி மகத்தையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை மற்றும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்த வாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க