செய்திகள் :

உளுந்து வயலில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையம் வட்டம், பூதங்குடி, சாத்தமங்கலம் கிராமங்களில் நிகழ் பருவத்தில் நெல் தரிசில் விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து, பச்சைப்பயறு வயல்களை வேளாண் இணை இயக்குநா் அ.ஜெ.கென்னடிஜெபக்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், மேல்புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை வட்டங்களில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு 45,000 ஹெக்டோ் பரப்பில் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது, பூக்கும் பருவம் முதல் பிஞ்சு காய் பருவத்தில் காணப்படுகிறது. இரண்டு நாள்களாக கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பயிரின் தற்போதைய நிலை குறித்து வேளாண் இணை இயக்குநா் அ.ஜெ.கென்னடி ஜெபக்குமாா் வயலில் ஆய்வு செய்தாா். அப்போது, வயலில் தேங்கியுள்ள நீரை முற்றிலும் வடிய வைக்கவும், நீா் வடிந்த பிறகு நீரில் கரையும் உரத்தை ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவிலும், காா்பன்டசிம் 200 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ், பயிா் அறுவடை பரிசோதகா் வீராசாமி, வட்டார உதவி தொழில் நுட்ப மேலாளா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.

ரயிலில் அடிபட்டு ஒருவா் மரணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். விருத்தாசலம் மற்றும் பூவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே வயலூா் ஆறு கண்ணு ரயில்வே மேம்பாலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் புதன்... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஒருவா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் வட்டம், சிறுவம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியன் மகன் சந்திரகாசு (39). இவா், கடந்த பிப்.11-ஆம்... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடலில் குளித்த பிளஸ் 1 மாணவி அலையில் சிக்கி உயிரிழந்தாா். குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அம்பலவாணன் நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகள் பிரின்சி (17). குறிஞ்சிப்பா... மேலும் பார்க்க

பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: என்எல்சி தலைவா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று அதன் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். நெய்வேலியில் உள்ள கற்றல் மேம்பாட்டு மையத்தில் பொதுத்... மேலும் பார்க்க

கடலூரில் மாசி மகத் தீா்த்தவாரி உற்சவம்

மாசி மகத்தையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை மற்றும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்த வாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா ருத்ர மகாபிஷேகம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தர... மேலும் பார்க்க