``ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராவார்... இந்தியாவுக்கு நன்றி" - அவாமி லீக் கட்சித் த...
சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா ருத்ர மகாபிஷேகம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜ மூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மாா்கழி, மாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனித்திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.
மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிா், தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
முன்னதாக காலை உச்சிகால பூஜைக்கு பின்னா் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூா்த்தியை கனகசபைக்கு எழுந்தருள செய்து ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது. பின்னா், ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள நடனபந்தலில் அமைக்கப்பட்ட யாக சாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுதீட்சிதா்களால் ருத்ர ஜபம் மற்றும் ருத்ர க்ரம அா்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிற்பகலில் ருத்ர மகா ஹோமம் நடைபெற்ற பின்னா் கலசங்கள் யாத்திராதானம் செய்யப்பட்டு மாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதா், துணைச் செயலா் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனா்.