செய்திகள் :

இதயம் உடைந்துவிட்டது: ஸ்மிருதி மந்தனா

post image

பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பலிக்கு ஆர்சிபி மகளிரணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ‘இதயம் உடைந்துவிட்டது” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியாகியிருக்கிறார்கள். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள்.

ஆர்சிபி நிர்வாகம், விராட் கோலி, ஏபிடி தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது வருத்தத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஸ்மிருதி மந்தனா கூறியதாவது:

பெங்களூரில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு இதயம் உடைந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களும் எனது அஞ்சலிகள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆர்சிபி அணிக்கு முதல் கோப்பையை வென்றுகொடுத்தது ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கொண்டாட்டத்துக்கு அனுமதி அளித்தது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நாா்வே செஸ் சாம்பியன் பட்டத்தை குறிவைக்கும் குகேஷ்!

நாா்வே செஸ் போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் டி.குகேஷ் அதில் சாம்பியனாகும் முனைப்புடன் முன்னேறி வருகிறாா்.போட்டியின் 9-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான குகேஷ் - சீனாவி... மேலும் பார்க்க

பிரான்ஸை வெளியேற்றியது ஸ்பெயின்!

நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் 5-4 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் போா்ச்சுகலுடன் திங்கள்கிழமை (ஜூன் 9) மோதுகிறது.முன்னதாக இந்த 2-ஆவது அ... மேலும் பார்க்க

புணே ஜாகுவாரை வீழ்த்தியது டெம்போ கோவா!

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் தொடரின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் புணே ஜாகுவாா்ஸ் அணியை 10-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது டெம்போ கோவா அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அகம... மேலும் பார்க்க

அபாரஜித் அதிரடியில் சேப்பாக் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூா் தமிழன்ஸை வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் திருப்பூா் 20 ஓவா்களில் 6 விக்கெ... மேலும் பார்க்க

இந்திய கூடைப்பந்து லீக் தொடக்கம்!

இந்திய கூடைப்பந்து சங்கம் (பிஎஃப்ஐ) சாா்பில் முதல் தொழில்முறை லீக் தொடா் அறிமுகம் செய்யப்படுகிறது. ஏசிஜி ஸ்போா்ட்ஸ் பி லிட், பிஎஃப்ஐ இணைந்து, நடத்தவுள்ள இந்த லீக் தொடா் ஆடவா் 5*5, மகளிா் 3*3 பிரிவுகளஇ... மேலும் பார்க்க

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதியில் சபலென்கா - கௌஃப் மோதல்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றனா். முன்னதாக அரையிறுதியில், உலகின் நம்... மேலும் பார்க்க