செய்திகள் :

"இது அமித் ஷாவின் வேட்டைக்காடு அல்ல; இது தமிழ்நாடு" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

post image

கோவை சிவானந்தாகாலனி பகுதியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, ‘‘தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களுக்கு அடித்தளமிட்டது சுயமரியாதை இயக்கம் தான்.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

பெரியார் தன் வாழ்நாளில் 13.20 லட்சம் கி.மீ தொலைவு பயணம் செய்தவர். அப்போதெல்லாம் இந்த காலத்தைப் போல் சாலை, மின்சார வசதிகள் இல்லை. பெரியார் தன் வாழ்வில் 10,700 பொதுக் கூட்டங்களில் பேசியவர்.

தி.மு.க இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகளை விட உண்மையான பெரியாரின் கொள்கை பேரனாக இருப்பதில்தான் பெருமை கொள்கிறேன்.

பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பு, பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் இணைக்கும் பழக்கம் இருந்தது.

பெரியார்
பெரியார்

ஆனால், அவர் மறைந்த போது யாருடைய பெயருக்குப் பின்னாலும் சாதிப் பெயர் போடும் பழக்கம் இல்லை. நாட்டில் வேறு எங்கும் இல்லை.

தி.மு.க ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாசிஸ்ட்கள் வெறி பிடித்து அலைகிறார்கள்.

பாசிஸ்ட்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதால் அவர்கள் கதறுகிறார்கள். பா.ஜ.க-வோடு சேர்ந்து அ.தி.மு.க-வும் கதறுகிறது.

தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் காப்பாற்றுவதற்காகத்தான் முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். அதனால் நம்முடைய முதலமைச்சரின் பெயரைக் கேட்டால் அவர்களுக்குப் பயம் வருகிறது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

இது அமித்ஷாவின் வேட்டைக்காடு அல்ல. தமிழ்நாடு என்பதை நாம் புரிய வைக்க வேண்டும். அதற்கு 2026 சட்டசபைத் தேர்தல் என்ற போரில் நாம் வெற்றி பெற வேண்டும்.

வருகிற சட்டசபைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெறும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

'என்னை சுடுங்கள்; ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பாதீங்க' - கதறும் பெண்மணி; பின்னணி என்ன?

ஒடிசா பலசோர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் பாகிஸ்தானை சேர்ந்த 72-வயது பெண்மணி. இவரது அப்பா பீகாரை சேர்ந்தவர். பல்வேறு காரணங்களால் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார். அவரது ... மேலும் பார்க்க

Pahalgam Attack: 'ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கை' - பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா

கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று இந்தியா வலுவாக சந்தேகிக்க... மேலும் பார்க்க

Pahalgam Attack: ஷோயப் அக்தரின் சேனல் உட்பட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை; காரணம் என்ன?

ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நா... மேலும் பார்க்க

`அகவிலைப்படி உயர்வு; திருமண முன்பணம் ரூ.5 லட்சம்’ - அரசு ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்புகள்

சட்டப்பேரவையில் இன்று( ஏப்ரல் 28) அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதன்படி, “அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு 2025 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து வழங்க... மேலும் பார்க்க

மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ - தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்?

மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி ... மேலும் பார்க்க

போரை நிறுத்தாத ரஷ்யா; உக்ரைனில் தொடரும் உயிர் பலிகள்! - என்ன நடந்தது?

'இதோ முடிந்துவிடும்', 'அதோ முடிந்துவிடும்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வந்த ரஷ்ய - உக்ரைன் போர், வெற்றிகரமான பேச்சுவார்த்தையை கூட இதுவரை எட்டவில்லை.ரஷ்யா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தொடர்ந்து... மேலும் பார்க்க