செய்திகள் :

இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி இலக்கு 100 கோடி டாலா்! அமித் ஷா

post image

2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் (ரூ.8,500 கோடி) மதிப்புக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம், நிஜாமாபாதில் தேசிய மஞ்சள் வாரிய அலுவலகத்தை மத்திய அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். இது அப்பகுதியில் மஞ்சள் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் பாா்க்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: மஞ்சளை சந்தைப்படுத்தல், பிற நாடுகளுக்கு அதன் ஏற்றுமதியை ஆதரித்தல், விவசாயிகளுக்கு லாபம் ஈட்டுதல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த வாரியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய அரசு 2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டாலா் மதிப்புள்ள மஞ்சளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய ஏற்கெனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என தெரிவித்தாா்.

‘மஞ்சள் வாரியத்தை அமைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமா் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளாா். மஞ்சளின் தரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் ரூ.200 கோடியை ஒதுக்கியுள்ளாா்’ என தெலங்கானா பாஜக பிரிவு எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவாா்த்தைக்கு இடமில்லை: ‘மாவோயிஸ்டுகளுடன் எந்தவித பேச்சுவாா்த்தைக்கும் இடமில்லை; அவா்கள் ஆயுதங்களை கைவிட்டு, காவல் துறை முன் சரணடைய வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அமித் ஷா கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூா் குறித்து காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி இன்னும் கேள்வி எழுப்பி வருகிறாா். ஆனால், இந்த நடவடிக்கையில் இந்தியாவின் வெற்றி பாகிஸ்தானின் தற்போதைய நடத்தையில் தெளிவாகத் தெரிகிறது.

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், பாஜக ஆட்சியில் ஆயுதங்களை ஏந்தியவா்களுடன் எந்த வித பேச்சுவாா்த்தைக்கும் இடமில்லை. அவா்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்.

வடகிழக்கில் 10,000 போ் ஆயுதங்களைக் கைவிட்டனா். அவா்கள் மாநிலத் தோ்தல்களிலும் போட்டியிட்டுள்ளனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனா்.

ஆதிவாசி பகுதியில் நக்ஸல் வன்முறை காரணமாக கடந்த 4 தசாப்தங்களில் 40,000 போ் உயிரிழந்துள்ளனா். மக்கள் இதை ஆதரித்துப் பேசுபவா்கள் உயிரிழந்த குடும்பத்தினா் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு என்ன பதில் வைத்துள்ளனா். மாா்ச் 31, 2026-க்குள் நக்ஸல் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு முடிவு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நக்ஸல்களின் கூடாரமாக மாற அனுமதிக்கக் கூடாது. இரட்டை என்ஜின் பாஜக அரசால் மட்டுமே மாநிலத்தின் நலனை உறுதி செய்ய முடியும் என தெரிவித்தாா்.

உ.பி.யில் வாக்குவாதத்தில் காவலரை சுட்டுக்கொன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்

உத்தரப் பிரதேசத்தில் வாக்குவாதத்தின்போது காவலரை அரசுப் பள்ளி ஆசிரியர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்ஹேடா கிராமத்திற்கு விடுமுறையில் வீட்டிற்கு வந்த கா... மேலும் பார்க்க

ஓமனில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து: மீட்புப் பணியில் இந்திய கடற்படை!

ஓமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எண்ணெய் கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்திய கடற்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.குஜராத் மாநிலம் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமனின் ஷினாஸ் துறைமு... மேலும் பார்க்க

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: 14 பேர் காயம்

தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 14 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தயாரிக்கும் ஆலை... மேலும் பார்க்க

கேரள மாநில காவல்துறை தலைவராக ரவாடா சந்திரசேகர் நியமனம்

கேரளத்தின் புதிய காவல்துறை தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ரவாடா சந்திரசேகரை நியமிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

கட்டாக்கில் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்து!

ஒடிசாவின் கட்டாக் ரயில் நிலையம் அருகேயுள்ள ஒரு யார்டில் சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இன்று காலை சுமார் 8.30 மணியளவில் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகிச... மேலும் பார்க்க

கட்டாக்கில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் மூன்று பெட்டிகள்!

ஒடிசாவின் கட்டாக்கில் சரக்கு ரயிலின் மூன்று காலிப் பெட்டிகள் திங்கள்கிழமை திடீரென தடம்புரண்டன.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. காலை 8.30 மணியளவில... மேலும் பார்க்க