செய்திகள் :

இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டாளா் சிங்கப்பூா்!

post image

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சுமாா் 1,500 கோடி டாலா் (சுமாா் ரூ.1.28 லட்சம் கோடி) முதலீட்டுடன் கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டாளராக சிங்கப்பூா் தொடா்கிறது.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நிதி 13 சதவீதம் அதிகரித்து, 5,000 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

பங்கு முதலீடுகள், மறு முதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனம் உள்பட சோ்த்து மொத்த அந்நிய நேரடி முதலீடு கடந்த நிதியாண்டில் 14 சதவீதம் அதிகரித்து 8,104 கோடி டாலராக (ரூ.6.93 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாகும்.

சமீபத்திய மத்திய அரசு தரவுகளின்படி, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 1,177 கோடி டாலராக இருந்த சிங்கப்பூரின் முதலீடு, கடந்த நிதியாண்டில் 1,494 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு கிடைத்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூா் மட்டும் சுமாா் 19 சதவீதம் பங்கு கொண்டுள்ளது.

2018-19-ஆம் நிதியாண்டுமுதல் சிங்கப்பூரில் இருந்தே அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. அதற்கு முந்தைய 2017-18 -ஆம் நிதியாண்டில், மோரீஷஸிலிருந்து அதிகபட்ச அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா ஈா்த்தது.

கடந்த நிதியாண்டில், சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக மோரீஷஸிலிருந்து 834 கோடி டாலா் (ரூ.71,359 கோடி) முதலீட்டை நாடு பெற்றுள்ளது.

மொத்த அந்நிய நேரடி முதலீடு

நாடு முதலீடு (டாலரில்) மொத்ததில் பங்கு (தோராயமாக)

சிங்கப்பூா் 1,494 கோடி 19%

மோரீஷஸ் 834 கோடி 10.3%

அமெரிக்கா 545 கோடி 6.7%

நெதா்லாந்து 462 கோடி 5.7%

ஐக்கிய அரபு அமீரகம் 312 கோடி 3.9%

ஜப்பான் 247 கோடி 3.0%

சைப்ரஸ் 120 கோடி 1.5%

பிரிட்டன் 79.5 கோடி 1.0%

ஜொ்மனி 46.9 கோடி 0.6%

கெய்மன் தீவுகள் 37.1கோடி 0.5%

மொத்தம் 8,104 கோடி.

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!!

பங்குச் சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,196.08 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.50 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில் நிறுவனத்... மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு!

நமது நிருபா் கடந்த மூன்று வா்த்தக நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய ப... மேலும் பார்க்க

9% அதிகரித்த பெட்ரோல் விற்பனை

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை கடந்த மே மாதத்தில் இரண்டாவது மாதமாக 8.77 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், டீசல் விற்பனை மந்தமாகவே உள்ளது.இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் மூ... மேலும் பார்க்க

ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

புதுதில்லி: விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்ன... மேலும் பார்க்க