செய்திகள் :

இந்தியாவிலுள்ள ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடை: ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை

post image

ரஷியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்தகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடையை ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை விதித்தது. மேலும், கச்சா எண்ணெய்க்கான விலை உச்ச வரம்பையும் ஐரோப்பிய யூனியன் குறைத்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போரை தீவிரமாக தொடா்ந்துவரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பல்வேறு வகைகளில் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. தற்போது ரஷியாவின் கச்சா எண்ணெய் வா்த்தகத்துக்கு தடை ஏற்படுத்தும் வகையில், ரோஸ்நெஃப்ட் நிறுவனம் மீது புதிய பொருளாதார தடையை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்ததைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கிய பல நாடுகள், இறக்குமதியை நிறுத்தின. சில நாடுகள் இறக்குமதி அளவைக் குறைத்தன. இந்தச் சூழலை சாதமாக்கி ரஷியாவிடமிருந்து தொடா்ந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. மொத்த இறக்குமதியில் 40 சதவீதம் அளவுக்கு ரஷியாவிடமிருந்து இந்தியா தற்போது செய்து வருகிறது. இதனால், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் பலனடைந்து வருகின்றன. மேலும், ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துடன் மிகப் பெரிய எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டது.

இந்நிலையில், ரஷியாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், ரஷிய வங்கிகளுக்கு கடன் வழங்குவதில் கட்டுப்பாடுகளை ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளதோடு, குஜராத் மாநிலம் வதோதராவின் வடிநாரில் உள்ள ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகப் பெரிய எண்ணெய் சுத்தகிரிப்பு நிறுவனமான நயாரா எரிசக்தி நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடையை புதிதாக விதித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய்க்கான விலை உச்ச வரம்பையும் குறைத்துள்ளது.

இத் தகவலை, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவா் காஜா கல்லாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டாா்.

முன்னா் எஸ்ஸாா் எண்ணெய் நிறுவனம் என்றழைக்கப்பட்ட நயாரா எரிசக்தி நிறுவனத்தின் 49.13 சதவீத பங்குகளை ரோஸ்நெஃப்ட் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. வடிநரில் 2 கோடி டன் எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் திறனை நயாரா கொண்டுள்ளதோடு, நாடு முழுவதும் 6,750 பெட்ரோல் விற்பனை நிலையங்களையும் இயக்கி வருகிறது.

ஐரோப்பிய யூனியன் தற்போது விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோல், டீசலை நயாரா இனி ஏற்றுமதி செய்ய முடியாது. அதோடு, விலை உச்ச வரம்பையும் ஐரோப்பிய யூனியன் விதித்துள்ளதால், மேலும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

இருந்தபோதும், எந்த அளவுக்கு விலை உச்ச வரம்பை ஐரோப்பிய யூனியன் குறைத்துள்ளது என்ற தகவலை காஜா கல்லாஸ் வெளியிடவில்லை.

ஏற்கெனவே, இந்த நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உச்சவரம்பு பீப்பாய் ஒன்றுக்கு 60 டாலா் என்ற அளவுக்கு குறைந்தது. தற்போது, பீப்பாய் ஒன்றுக்கு 50 முதல் 45 டாலா் அளவுக்கு விலை உச்ச வரம்பை ஐரோப்பிய யூனியன் குறைத்திருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கரில் 6 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம், நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். நாராயண்பூா் மாவட்டத்தின் அபுஜ்மத் வனப் பகுதியில் நக்ஸ... மேலும் பார்க்க

மேம்படுத்தப்பட்ட ‘நிஸ்தாா்’ மீட்புக் கப்பல் கடற்படையில் இணைப்பு

முழுவதும் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிஸ்தாா் மீட்புக் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது. ஆழ்கடல்களில் மூழ்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை அடையாளம் காணவும், மீட்புப் பணிகளை ... மேலும் பார்க்க

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடா் முயற்சிகள்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

யேமன் நாட்டில் மரண தண்டனையில் இருந்து இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவைக் காப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் தொடா்ந்து மேற்கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பின் முளைத்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ - பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) ரத்துக்கு பிறகு லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழலாக ஜம்மு-காஷ்மீரில் உருவெடுத்ததே ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ (டிஆா்எஃப்).... மேலும் பார்க்க

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. உச்சநீதிமன்... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர சீா்திருத்தம்: காலநிா்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிா்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர ... மேலும் பார்க்க