செய்திகள் :

'இந்தியாவில் குறைந்தது; பாகிஸ்தானில் உயர்வு' - வெளியான ஏழ்மை புள்ளிவிவரங்கள்; இந்தியா, பாக் ஒப்பீடு!

post image

கடந்த சனிக்கிழமை (ஜூன் 5), உலக வங்கி இந்தியாவின் பொருளாதார நிலை குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளன.

இந்தத் தரவுகள் 2011-12 நிதியாண்டோடு 2022-23 நிதியாண்டை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தரவுகளில் பணவீக்கத்திற்கு ஏற்ப, மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருப்பவர்களின் வருமானத்தை ஒரு நாளைக்கு 2.15 டாலரில் இருந்து 3 டாலர்களாக உயர்த்தியுள்ளது உலக வங்கி.

இந்தத் தரவுகளின் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஓர் ஒப்பீட்டை பார்க்கலாம்...

2011-12 நிதியாண்டில், மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்த 27.1 சதவிகிதத்தினர் 2022-23 நிதியாண்டில் 5.3 சதவிகிதமாக குறைந்துள்ளனர்.

உலக வங்கி
உலக வங்கி

2011-12 நிதியாண்டில், 344.47 மில்லியன் பேர் இந்தியாவில் மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்தனர். 2022-23 நிதியாண்டில், 75.24 மில்லியன் பேர் என மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது, இடைப்பட்ட காலக்கட்டத்தில், கிட்டத்தட்ட 269 மில்லியன் பேர் இந்தியாவில் மிகுந்த ஏழ்மைக் கோட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.

பாகிஸ்தானை பொறுத்தவரை, 2017 மற்றும் 2021 ஆண்டுகளின் இடையே, அவர்களின் மிகுந்த ஏழ்மைக் கோடு சதவிகிதம் 4.9 சதவிகிதத்தில் இருந்து 16.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த ஏழ்மை சதவிகிதம் பாகிஸ்தானில் 39.8 சதவிகிதத்தில் இருந்து 44.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்தத் தரவுகளில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 4.2 டாலர் வருமானம் என்று எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏன் இந்த ஏற்ற, இறக்கங்கள்?

மேலே குறிப்பிட்டுள்ள 11 ஆண்டு காலக்கட்டத்தில், இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக, இந்தக் காலக்கட்டத்தில், வளரும் பொருளாதாரமாகவும், தற்சார்புடையதாகவும் உயர்ந்துள்ளது.

ஆனால், பாகிஸ்தான் 2017 முதல் 2021 வரை ஐந்து ஆண்டுகளில்...

சர்வதேச நாணய நிதியத்திடம் 25 நிலுவைகளில் 44.57 பில்லியன் டாலர்கள் கடன்கள்;

உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, இஸ்லாமிய வளர்ச்சி வங்கியில் கிட்டத்தட்ட 38.8 பில்லியன் டாலர் கடன்கள்;

சீனாவிடம் இருந்து 25 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட கடன்கள்;

பாண்டுகள் மூலம் 7.8 பில்லியன் டாலர்கள் கடன்கள்;

சவுதி அரேபியா, பாரீஸ் கிளப் போன்றவற்றில் இருந்து பல பில்லியன் கடன்கள் வாங்கியுள்ளது.

இந்தியாவிற்கும் பல கடன்கள் உள்ளது தான். ஆனால், பாகிஸ்தானை ஒப்பிடுகையில் குறைவு தான்.

Plane Crash : உலகை உலுக்கிய Ahmedabad விமான விபத்து | Anbumani Ramadoss | Imperfect Show 12.6.2025

* "அன்புமணி ராமதாஸ் உடனான பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது" - ராமதாஸ் * பாமக வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பில் பாலு தொடர்வார் * கட்சியினரை அவமதிக்கும் அன்புமணி.. வைரல் ... மேலும் பார்க்க

'கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை; பாஜக ஆட்சிதான் என் விருப்பம்.. ஆனாலும்...' - அண்ணாமலை ஓப்பன் டாக்

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் கடந்த 11 ஆண்டுகளில் 2 கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டி கொடுக்கப்... மேலும் பார்க்க

'எலானுக்கு மன்னிப்பு உண்டு' - சமாதான கொடியை பறக்கவிடும் ட்ரம்ப், எலான் மஸ்க்; பின்னணியில் என்ன?

00"கடந்த வாரம் அதிபர் ட்ரம்ப் குறித்து நான் போட்ட பதிவுகளுக்கு வருத்தமடைகிறேன். அவை மிகவும் எல்லை மீறிவிட்டன' - இது நேற்று எலான் மஸ்க் போட்ட பதிவு. 'என்னதிது...?' என்று இந்தப் போஸ்ட் பெரும் ஆச்சரியத்த... மேலும் பார்க்க

"10 ஆண்டுகளாக கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்ன விண்வெளி ஆராய்ச்சி மையமா?" - முதல்வர் கேள்வி!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நெற் களஞ்சியம் டெல்டா மாவட்டங்கள் என்றால்... மேலும் பார்க்க