செய்திகள் :

இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியா் நாடுகடத்தல்- ஹைதராபாத் போலீஸ் நடவடிக்கை

post image

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, 14 ஆண்டுகள் தங்கியிருந்த பாகிஸ்தான் நபரை அட்டாரி எல்லை வழியாக நாடு கடத்தியதாக ஹைதராபாத் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாகிஸ்தானைச் சோ்ந்த முகமது உஸ்மான் என்பவா், கடந்த 2011-இல் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, ஹைதராபாதில் தங்கியிருந்தாா். இங்கு பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக அவா் மீது 4 வழக்குகள் பதிவாகின. இவ்வழக்குகளில் 5 ஆண்டுகள் வரை அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஹைதராபாத் தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டிருந்த முகமது உஸ்மான், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் அட்டாரி எல்லை வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை நாடு கடத்தப்பட்டாா். உரிய நடைமுறைகளுக்குப் பின் பாகிஸ்தான் ரேஞ்சா்ஸ் படையினரிடம் அவா் ஒப்படைக்கப்பட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஹைதராபாதில் உள்ள தடுப்புக் காவல் மையம், கடந்த 2018-இல் நிறுவப்பட்டது. இந்த மையத்தில் அடைக்கப்பட்டிருந்த 158 வெளிநாட்டுக் கைதிகளில் 150 போ் நாடு கடத்தப்பட்டுள்ளனா். கடந்த ஆகஸ்டில் வங்கதேச நாட்டவா் 20 போ், எல்லை வழியாக நாடுகடத்தப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தீ போல பரவும் வாக்குத் திருட்டு பிரசாரம்: ராகுல் காந்தி

புது தில்லி: வாக்குகளைத் திருடியே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது என்பதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறோம் என்று காங்கிரஸ் எம்.பி. ... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம்: ஒடிசா அரசின் புதிய திட்டம்!

மின்சார வாகனங்களுக்கு அதிக மானியம் வழங்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசு தனது புதிய வரைவு மின்சார வாகனக் கொள்கை - 2025இன் கீழ் இந்தி விதியை இணைத்துள்ளது. இது சம்பந்தப்... மேலும் பார்க்க

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன்

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் கேரளத்தின் கலாசாரத்தை அழித்துவிடும் என்றும் ஓணம் உள்பட ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 16 நச்கல்கள் சரண்!

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் 16 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களாகப் பல நக்சல்கள் சரணடைந்து வரும் நிலையில், வியாழக்கிழமை மேலும் 16 நக்சல்கள் மூத்த காவல்துறை ... மேலும் பார்க்க

14 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புவனேசுவரத்தில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 14 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள தனியார் நட்சத்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் கைது! சதித்திட்டம் முறியடிப்பு!

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகளை தில்லி பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும், ஐஇடி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த பொருள்களையு... மேலும் பார்க்க