செய்திகள் :

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

post image

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தியாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முற்பட்டதையடுத்து, பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியா போரை நிறுத்தியது.

இதனிடையே, பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளம் தாக்குதலுக்கு உள்ளானதால், போரை நிறுத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறுகையில், ``நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. தாக்குதலின்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் நான் பேசியது குறித்து சௌதி இளவரசர் பைசன் கேட்டறிந்தார்.

போரை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டால், பாகிஸ்தானும் ஒப்புக் கொள்ளுமா என்று என்னை பைசல் கேட்டார். நானும் சரி என்று கூறினேன்.

தொடர்ந்து, மீண்டும் அழைத்த பைசல், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியதாகக் கூறினார். என்னிடம் சொன்னதைத் தான் ஜெய்சங்கரிடமும் கூறியதாகச் சொன்னார்’’ என்று தெரிவித்தார்.

ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை நிறுத்த, தான் மட்டுமே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபகாலமாக கூறி வந்தார். இரு நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்தி விடுவதாகக் கூறி, போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறி வந்தார்.

இந்த நிலையில், போர் நிறுத்த முடிவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள்தான் முடிவெடுத்தன என்று வியாழக்கிழமையில் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.

இதையும் படிக்க:இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு!

அகமதாபாத் விபத்து: 223 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 223 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை 11:50 மணி நிலவரப்படி 204 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சிவில் மருத்துவமனை கண்க... மேலும் பார்க்க

நன்றி! ஆனால்... டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது பற்றி மோடி கூறியதென்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வருகை அழைப்பை நிராகரித்தது ஏன்? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட... மேலும் பார்க்க

தில்லியில் முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை!

தில்லியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.... மேலும் பார்க்க

அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் குற்றச்சாட்டு

அசாம் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான சமூக வலைதள கணக்குகள் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா குற்றம்சாட்டியுள்ளார். பத்த... மேலும் பார்க்க

மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் மோகன்லாலுக்குச் சொந்தமான ஊட்டி பங்களாவில் பயணிகள் தங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அது தொடர்பான அனைத்துத்தகவல்களும் தற்போது சுற்றுலா வழிகாட்டும... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தப்படும் கங்கை நதி! காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் பிரசாரத்துக்காக கங்கை நதி தூய்மையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரமதர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட... மேலும் பார்க்க