கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி
இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!
இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தியாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முற்பட்டதையடுத்து, பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியா போரை நிறுத்தியது.
இதனிடையே, பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளம் தாக்குதலுக்கு உள்ளானதால், போரை நிறுத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ``நூர் கான் மற்றும் ஷோர்கோட் விமானத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. தாக்குதலின்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் நான் பேசியது குறித்து சௌதி இளவரசர் பைசன் கேட்டறிந்தார்.
போரை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டால், பாகிஸ்தானும் ஒப்புக் கொள்ளுமா என்று என்னை பைசல் கேட்டார். நானும் சரி என்று கூறினேன்.
தொடர்ந்து, மீண்டும் அழைத்த பைசல், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசியதாகக் கூறினார். என்னிடம் சொன்னதைத் தான் ஜெய்சங்கரிடமும் கூறியதாகச் சொன்னார்’’ என்று தெரிவித்தார்.
ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை நிறுத்த, தான் மட்டுமே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபகாலமாக கூறி வந்தார். இரு நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்தி விடுவதாகக் கூறி, போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறி வந்தார்.
இந்த நிலையில், போர் நிறுத்த முடிவை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள்தான் முடிவெடுத்தன என்று வியாழக்கிழமையில் டிரம்ப் ஒப்புக் கொண்டார்.
இதையும் படிக்க:இணைய வரலாற்றில் முதன்முறையாக 1600 கோடி கடவுச்சொற்கள் திருட்டு!