செய்திகள் :

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாா்! பாகிஸ்தான் அமைச்சா் மிரட்டல்!

post image

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீா் தொடா்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது, அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்நிலையில், இஸ்லாமாபாதில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியைச் சோ்ந்த அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு வரும் சிந்து நதி நீரை நிறுத்தினால் இந்தியா முழு அளவிலான போருக்கு தயாராக வேண்டியது இருக்கும். பாகிஸ்தானில் ஏவுகணைகள், ராணுவ தளவாடங்கள் போதுமான அளவு உள்ளன. எங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல.

130 அணு ஆயுதங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவை இந்தியாவைத் தாக்க தயாராகவே உள்ளன. பிரச்னை ஏற்பட்டால் தாக்குதல் நடத்தப்படும். நான் மீண்டும் கூறுகிறேன் பாகிஸ்தானின் பாலஸ்டிக் ஏவுகணைகள் அனைத்தும் உங்களையே (இந்தியா) குறிவைக்கின்றன.

இந்தியாவின் பாதுகாப்பு குறைபாடுகள்தான் காஷ்மீரில் நிகழும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணம். ஆனால், தேவையில்லாமல் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுகிறாா்கள். பாகிஸ்தானுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளில் இருந்து மீள பாகிஸ்தான் ஏற்கெனவே தயாராகி வருகிறது. இந்த விஷயத்திலும் இந்தியாவுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்றாா்.

சண்டைக்கு தயாராகிவிட்டது இந்தியா; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்! - பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா தயாராகிவிட்டதாகவும் இந்த சூழலில் தங்களிடமிருக்கும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்க மட்டோம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெளிவுபடுத... மேலும் பார்க்க

உக்ரைன் மீது 3 நாள்கள் போர் நிறுத்தம்: ரஷிய அதிபர் அறிவிப்பு!

உக்ரைன் மீதான போரை 3 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ரஷிய அதிபா... மேலும் பார்க்க

ஸ்பெயின், போர்ச்சுகலில் மின் தடையால் இருளில் தவிக்கும் மக்கள்: ரயில், சாலை போக்குவரத்து பாதிப்பு!

ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் திங்கள்கிழமை(ஏப். 28) திடீரென மின் விநியோகம் தடைபட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மேற்கு ஐரோப்பிய பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இருளில் மூழ்க... மேலும் பார்க்க

ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச்சுகலில் வரலாறு காணாத மின் தடை!

ஸ்பெயின் நாடு முழுவதும், போச்சுக்கலின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டில் பல பகுதிகளில் இன்று வரலாறு காணாத மின் தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகியிருக்கிறார்கள்.ஸ்பெயின் மற்றும் ப... மேலும் பார்க்க

வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: மிகப்பெரிய இழப்பை சந்தித்த பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்கா வான்வழித் தாக்குதல்: 30 பேர் பலி!

ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறையின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில், 30 பேர் கொல்லப்பட்டதாக யேமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹவுத்திகளின் கோ... மேலும் பார்க்க