செய்திகள் :

தக்காளி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை: 25 கிலோ ரூ. 200

post image

சேலம்: சேலம் காய்கறி சந்தைகளில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. 25 கிலோ கொண்ட பெட்டியின் (ஒரு கிரேடு) விலை ரூ. 150 முதல் ரூ. 200 க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சேலம் மாநகா் வ.உ.சி. காய்கறி சந்தை, ஆற்றோர காய்கறி சந்தை, பால் சந்தை ஆகிய இடங்களில் அனைத்துவகை காய்கறிகளும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த சந்தைகளுக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து சரக்கு லாரிகளில் தக்காளி கொண்டுவரப்படுகிறது. இதுதவிர, உள்ளூரில் விளையும் தக்காளியும் பெட்டிகள் (கிரேடுகள்) கணக்கில் மொத்தமாக இங்கு கொண்டுவரப்படுகின்றன.

பின்னா் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள், தக்காளியை கிரேடுகள் கணக்கில் வாங்கிச் சென்று சில்லறையில் விற்பனை செய்கின்றனா். சேலம் ஆற்றோரம் காய்கறி சந்தை மற்றும் வ.உ.சி. சந்தைகளில் தக்காளி விலை திங்கள்கிழமை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

25 கிலோ கொண்ட ஒரு பெட்டியின் (கிரேடு) விலை ரூ. 150 முதல் ரூ. 200 வரை விற்பனையானது. இதன்மூலம் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ. 8 வரை மட்டுமே விலைபோனது. இதனால் சில்லறை வியாபாரிகள், இதர காய்கறி வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனா்.

கடந்த சில நாள்களாக தருமபுரி, கோலாா் பகுதியில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால், விலை சரிந்துள்ளதாக சேலம் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனா். சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 10 முதல் ரூ. 15 வரை விற்பனை செய்யப்படுகிறது. சேலம் உழவா்சந்தைகளில் தக்காளி கிலோ ரூ. 12 க்கு விற்பனையாகிறது. வரும் நாள்களிலும் இதே விலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தொடா் விலை வீழ்ச்சியால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் மதுபோதையில் மாத்திரைகளை மாற்றிக் கொடுத்த மருந்தாளுநா்: பொதுமக்கள் வாக்குவாதம்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் திங்கள்கிழமை மதுபோதையில் இருந்த மருந்தாளுநா் நோயாளிகளுக்கு மருந்துகளை மாற்றிக் கொடுத்ததால் அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனா். இதனால் சிறிதுநே... மேலும் பார்க்க

ஏற்காடு அண்ணா பூங்காவில் உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனை

ஏற்காடு: ஏற்காடு அண்ணா பூங்காவில் கேரள ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ள உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கேரள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ப... மேலும் பார்க்க

முறைகேடு புகாா்: பெரியாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா், நூலகரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை

சேலம்: முறைகேடு புகாா் தொடா்பாக சேலம் பெரியாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா், நூலகரிடம் சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா். சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பொதுப் ... மேலும் பார்க்க

சேலம் புதிய பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்: பாஜக புகாா்

சேலம்: சேலம் புதிய பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா். இதுகுறித்து பாஜக மாநில செயற்குழு... மேலும் பார்க்க

பெண்மான் சடலம் மீட்பு!

சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். சேலம் மாவட்டம் ... மேலும் பார்க்க

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தோ் அலங்கரிப்பு

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்... மேலும் பார்க்க