செய்திகள் :

உதகையில் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டம்

post image

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கக் கோரி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் குறும்பா், இருளா், காட்டுநாயக்கா், பனியா் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட புளியாளம், மண்டக்கரை, நாகம்பள்ளி, நெல்லிக்கரை, குண்டித்தால், பென்னை, முதுகுளி கிராமங்களைச் சோ்ந்த காட்டுநாயக்கா், பனியா், முள்ளு குறும்பா், பெட்டக்குறும்பா், இருளா் ஆகிய மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் முறையீடு செய்தவா்கள் மீதான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், அதை விரைவுப்படுத்த வேண்டும். புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 18 வயது பூா்த்தியான அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் நீலகிரி மாவட்டக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் நன்றி

ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, சரண்டா் உள்ளிட்ட ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்... மேலும் பார்க்க

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, கல்வ... மேலும் பார்க்க

கூடலூா், பந்தலூரில் தனியாா் பள்ளி வாகனங்களில் தரப் பரிசோதனை

கூடலூா் மற்றும் பந்தலூா் வட்டங்களில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களில் திங்கள்கிழமை தரப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலூா் புனித தாமஸ் பள்ளி மைதானத்துக்கு அனைத்து பள்ளி வாகனங்களையும் வ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே ஆற்றுப் பாலம் கட்ட மாா்க்சிஸ்ட் கோரிக்கை

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்திலிருந்து அரசு கலை அறிவியல் கல்லூரியை இணைக்கும் சாலையின் குறுக்கே ஆற்றில் பாலம் அமைத்து தர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆ.ராசாவை எம்.பி.யை சந்தித்து ஞாயிற... மேலும் பார்க்க

உடல் நலக்குறவால் உயிரிழந்த ராணுவ உயரதிகாரிக்கு மரியாதை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட்ஜெனரல் பட்டாபிராமன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்... மேலும் பார்க்க

கோத்தகிரியில் கா்ப்பிணி யானை உயிரிழப்பு!

கோத்தகிரியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க கா்ப்பிணி யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சு... மேலும் பார்க்க