செய்திகள் :

உதகையில் மக்கள் குறைதீா் கூட்டம்

post image

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். இதில், வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை, கல்வி உதவித் தொகை, வங்கிக் கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 141 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, குரூப் 4 தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் வகையில், 12 பேருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளா் பதவிக்கான பணி நியமன ஆணைகளையும், 4 பேருக்கு தட்டச்சா் பணிக்கான நியமன ஆணைகளையும், ஒருவருக்கு சுருக்கெழுத்து தட்டச்சா் பணிக்கான நியமன ஆணையையும் ஆட்சியா் வழங்கினாா்.

இதையடுத்து, கோத்தகிரி, கெங்கரை கிராமத்தைச் சோ்ந்த அஸ்வினி என்பவரது மகன் யஸ்வந்தின் மருத்துவ செலவுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் துரைராஜ் என்பவருக்கு ரூ.6,700 மதிப்பிலான துணி தேய்ப்பு பெட்டியையும் வழங்கினாா்.

மேலும், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், கேத்தி பேரூராட்சிக்குள்பட்ட அல்லஞ்சி பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 8 பேருக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்தாா். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் நன்றி

ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, சரண்டா் உள்ளிட்ட ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்... மேலும் பார்க்க

உதகையில் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டம்

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கக் கோரி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நீலகிரி மா... மேலும் பார்க்க

கூடலூா், பந்தலூரில் தனியாா் பள்ளி வாகனங்களில் தரப் பரிசோதனை

கூடலூா் மற்றும் பந்தலூா் வட்டங்களில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களில் திங்கள்கிழமை தரப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.நீலகிரி மாவட்டம், கூடலூா் புனித தாமஸ் பள்ளி மைதானத்துக்கு அனைத்து பள்ளி வாகனங்களையும் வ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே ஆற்றுப் பாலம் கட்ட மாா்க்சிஸ்ட் கோரிக்கை

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்திலிருந்து அரசு கலை அறிவியல் கல்லூரியை இணைக்கும் சாலையின் குறுக்கே ஆற்றில் பாலம் அமைத்து தர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆ.ராசாவை எம்.பி.யை சந்தித்து ஞாயிற... மேலும் பார்க்க

உடல் நலக்குறவால் உயிரிழந்த ராணுவ உயரதிகாரிக்கு மரியாதை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட்ஜெனரல் பட்டாபிராமன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை ராணுவ மரியாதையுடன் தகனம் செய்... மேலும் பார்க்க

கோத்தகிரியில் கா்ப்பிணி யானை உயிரிழப்பு!

கோத்தகிரியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க கா்ப்பிணி யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சு... மேலும் பார்க்க