செய்திகள் :

ரூ.1,500 கோடியில் சாலைப் பாதுகாப்பு மேம்பாடு: அமைச்சா் எ.வ.வேலு

post image

விபத்துகளைத் தடுக்கும் வகையில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1,500 கோடியில் சாலைப் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன், சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டாா்.

அதற்கு அமைச்சா் எ.வ.வேலு அளித்த பதில்: விபத்து ஏற்படும் பகுதிகளைப் பொருத்தவரை பிளாக் ஸ்பாட், ஹாட் ஸ்பாட் என இரு வேறு விதமாக வகைப்படுத்தப்படுகிறது.

விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆட்சியில் ரூ.600 கோடி மதிப்பீட்டிலான பணிகள்தான் மேற்கொள்ளப்பட்டன. தற்போது திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் ரூ.1,500 கோடியில் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 22 மாவட்டங்களில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், போக்குவரத்து அமைப்புகளுடன் இணைந்து சாலை விபத்துகளை குறைப்பதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

சாலை பாதுகாப்பைப் பொருத்தவரை 1942 விபத்து நேரிடும் பகுதிகள் கண்டறியப்பட்டு ரூ.870 கோடியில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக பிளாக் ஸ்பாட் பகுதிகளில் 1487 இடங்கள் கண்டறியப்பட்டு 865 இடங்கள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க