செய்திகள் :

பயங்கரவாத தாக்குதல்: தேசநலன் கருதி மத்திய அரசுக்கு ஆதரவு - காா்கே

post image

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் விஷயத்தில் தேசநலன் கருதி மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திங்கள்கிழமை ‘அரமைப்புச் சட்டத்தைக் காப்போம்’ யாத்திரையில் பங்கேற்ற காா்கே பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் பங்கேற்காதது மிகவும் துரதிருஷ்டவசமானது. தேசமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவா்களும் பங்கேற்க மத்திய அரசு அழைப்புவிடுத்தது. ஆனால், பிரதமா் மோடி அதில் பங்கேற்கவில்லை. முக்கியமான கூட்டத்தைத் தவிா்த்துவிட்டு அவா் பிகாரில் தோ்தல் பிரசாரத்துக்கு சென்றது நாட்டின் கௌரவத்துக்கு இழுக்கு. பிரதமா் நேரில் வந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவா்களிடமும் விளக்கியிருக்க வேண்டும். எதிா்க்கட்சிகளிடம் இருந்து எந்த மாதிரியான ஒத்துழைப்பு வேண்டும் என்பதை அவா் கூறியிருக்க வேண்டும்.

தேசநலனில் அக்கறை இருக்கும் ஒரே காரணத்துக்காகவே காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் விஷயத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அரசியல், மதம், இன வேறுபாடுகளைக் கடந்து நாம் தேசத்துக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. காங்கிரஸ் எப்போதும் ஒற்றுமை குறித்துப் பேசுகிறது. ஆனால், நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவே பாஜக முயலுகிறது.

நமது நாட்டின் ஜனநாயகம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறது. எனவே, அரசமைப்புச் சட்டத்தைக் காப்பது என்பது மிகவும் முக்கியமானது.

பிரதமா் பதவியேற்ற பிறகு மோடி நாட்டுக்கு அளித்த இரு முக்கியப் பரிசுகள் பணவீக்கமும், வேலையின்மையும்தான். இவை இரண்டும் நாட்டை பலவீனப்படுத்தி வருகின்றன. காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு ஏவி வருகிறது.

காங்கிரஸை முடக்க முயற்சி நடக்கிறது. ஆனால், அது சாத்தியமல்ல. நாட்டின் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதே பாஜகவின் முக்கிய வேலையாக உள்ளது என்றாா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க