தஹாவூா் ராணாவின் என்ஐஏ காவல் மேலும் 12 நாள்களுக்கு நீட்டிப்பு
புது தில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாள்களுக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் தஹாவூா் ராணா குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த மாத தொடக்கத்தில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.
தொடா்ந்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட தஹாவூா் ராணாவை 18 நாள்கள் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டது. என்ஏஐ காவல் முடிவடைந்த நிலையில், நீதிமன்றத்தில் அவா் திங்கள்கிழமை மீண்டும் ஆஜா்படுத்தப்பட்டாா்.
என்ஐஏ சாா்பில் மூத்த வழக்குரைஞா் தயான் கிருஷ்ணன், சிறப்பு அரசு வழக்குரைஞா் நரேந்தா் மான் ஆகியோரும், தஹாவூா் ராணா சாா்பில் தில்லி சட்டப் பணிகள் ஆணையத்தின் பியூஷ் சச்தேவாவும் ஆஜராகினா்.
என்ஐஏ தரப்பில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கோரிய நிலையில், தஹாவூா் ராணாவின் என்ஐஏ காவலை மேலும் 12 நாள்களுக்கு நீட்டித்து சிறப்பு நீதிபதி சந்தா் ஜித் சிங் உத்தரவிட்டாா்.