செய்திகள் :

இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் ஆஸிஸ் எசார் என்ற பயங்கரவாதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலை நேரத்தில், அப்துல் ஆஸிஸ், மர்மமான முறையில், மரணமடைந்து கிடந்ததாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

ஐஎஸ்ஐ அமைப்பினால் உருவாக்கப்பட்ட ஜெய்ஸ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதிகள் ஒவ்வொருவராக அண்மைக் காலமாக மர்மமான முறையில் இறந்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான், ஜூன் 2ஆம் தேதி அப்துல் ஆஸிஸ் பலியானதாகவும், அவரது இறதிச் சடங்குகள் பயங்கரவாத அமைப்பின் பஹவல்பூர் தலைமையகத்தில் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, மிக மோசமாக பாதிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களில் ஒன்றாக பஹவல்பூர் தலைமையகம் இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்பட 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்த இடத்திலிருந்துதான் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டெலிகிராம் வழியாக, ஜெய்ஷ் அமைப்பினர், அப்துல் ஆஸிஸ் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாகக் கூறினாலும், அதிகாரப்பூர்வமாகவோ, பாகிஸ்தான் காவல்துறையோ அவ்வாறு தெரிவிக்கவில்லை. மர்ம மரணம் என்றே குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவை துண்டுத் துண்டாக்குவேன் என்றும், இந்தியாவுக்கு எதிராக மிக மோசமான மிரட்டல்களை விடுப்பதன் மூலமும் மிகவும் பிரபலமானவர் அப்துல் ஆஸிஸ். இந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிடுங்கிவிடுவோம் என்று கடந்த மாதம் நடந்த பயங்கரவாதப் பேரணியில் கூட பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், முஜாஹிதீன் பயங்கரவாதிகள் வருகிறார்கள், உங்களால் முடித்தால் தடுத்துப் பாருங்கள். இல்லாவிட்டால், அவர்கள் காஷ்மீரை உங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்வார்கள். முஜாஹிதீன் பயங்கரவாதிகள் கிளம்பிவிட்ர் என்று பேசி விடியோ வெளியிட்டிருந்தார்.

அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! டிரம்ப் உறுதி

சீனாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்தார்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாட... மேலும் பார்க்க

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க