செய்திகள் :

இந்தியா - பாகிஸ்தான்..அணு ஆயுதப்போரை நிறுத்தியுள்ளோம்! மீண்டும் சீண்டும் அதிபர் டிரம்ப்!

post image

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை வர்த்தகத்தைக் காரணமாகக் கூறி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட அந்த அமைப்பு நாடுகளின் தலைவர்கள் இன்று (ஜூன் 25) பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், உலக நாடுகளுக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகப் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை வர்த்தகத்தைக் காரணமாகக் கூறி சில செல்போன் அழைப்புகளில் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:

”இவற்றில் முக்கியமானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான்.. நான் அந்தப் போரை வர்த்தகத்தை மையமாகக் கூறி சில செல்போன் அழைப்புகளில் முடிவுக்குக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் சண்டையிட்டால் நாங்கள் உங்களுடன் வர்த்தகம் செய்யப்போவதில்லை எனக் கூறினேன்.

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி கடந்த வாரம் எனது அலுவலகத்துக்கு வந்திருந்தார். பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவர் ஒரு சிறந்த மனிதர். நான் அவர்களுக்கு ஒரு காரணத்தை உருவாக்கினேன். நீங்கள் சண்டையிட்டால் நாங்கள் வர்த்தகம் செய்யப்போவதில்லை எனக் கூறினேன். அதற்கு அவர்கள் இல்லை..எனக்கு வர்த்தகம் செய்யவேண்டும் எனக் கூறினார்கள். நாங்கள் அணு ஆயுதப் போரை நிறுத்தினோம்” எனப் பேசியுள்ளார்.

இத்துடன், கடந்த சில வாரங்களாக இந்தியா - பாகிஸ்தான், கொசோவோ மற்றும் செர்பியா ஆகிய நாடுகளை நாங்கள் கவனித்துக்கொண்டோம் எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்ததில் மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மேலும், இந்தப் போரை தான் நிறுத்தியதாகக் கூறவேண்டாம் என அதிபர் டிரம்ப்பிடம், பிரதமர் நரேந்திர மோடி கறாராகக் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர், இந்தப் போரை முடிவுக்கொண்டு வருதற்கு இருநாடுகளும்தான் ஒப்புக்கொண்டன என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அமெரிக்க தாக்குதலின் வெற்றி? அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

நியூயாா்க் மேயா் தோ்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளி நபர் தோ்வு

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியான ஸோக்ரன் மம்தாணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இதற்கான உள்கட்சி தோ்தல... மேலும் பார்க்க

மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் மோதல்: பாஜக

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது ஒருவா் மீது மற்றொருவா் மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் இடையே நடைபெறும் மோதலாகும் என்று பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி ரூ.3,012 கோடி கடன்: ஒப்பந்தம் கையொப்பம்

ஆசிய வளா்ச்சி வங்கியிடம் இருந்து 350 மில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.3,012 கோடி) கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது. பெண்களை பொருளாதாரரீதியாக முன்னேற்றுவது, அவா்களை தொழி... மேலும் பார்க்க

ஈரான்: உளவுக் குற்றச்சாட்டில் 3 பேருக்குத் தூக்கு

துபை: இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூன்று கைதிகளை ஈரான் புதன்கிழமை தூக்கிலிட்டது.அந்த நாட்டின் மேற்கு அஜா்பைஜான் மாகாணத்திலுள்ள உா்மியா சிறையில் மூன்று பேருக்கும் மரண தண்டனை... மேலும் பார்க்க

காஸாவில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழப்பு

ஜெருசலேம்: காஸாவில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 7 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்தனா்.கான் யூனிஸ் நகரில் அந்த 7 பேரும் சென்றுகொண்டிருந்த கவச வாகனத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்... மேலும் பார்க்க

தாக்குதலால் ஈரான் அணுசக்தி திட்டங்கள் அழிக்கப்படவில்லை - அமெரிக்க உளவுத் துறை அறிக்கை

ஈரானின் அணுசக்தி மையங்களில் அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய சக்திவாய்ந்த தாக்குதலில் அந்த நாட்டின் அணுசக்தி திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டதே தவிர முற்றிலும் அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உ... மேலும் பார்க்க