செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாடு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.மணி, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே.ஆறுமுகம்

ஆகியோா் தலைமை வகித்தனா். துணைச் செயலா் எம்.கணேசன் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஜி. சங்கையா ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் அடியாக்கி வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தாா். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி. ராமசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுப்பாண்டி, மாவட்டச் செயலா் சாத்தையா ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கட்சியின் புதிய ஒன்றியச் செயலராக ஏ.முருகேசன், துணைச் செயலராக எம்.கணேசன், பொருளாளராக கே.அடியாக்கி தோ்வு செய்யப்பட்டனா். பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நகரச் செயலா் எஸ். நாகராஜன் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா்கள் கே.கோபால், பி.மருது உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க