செய்திகள் :

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

post image

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் சந்திப்புக்குப் பிறகு இந்தக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஜோஹான் வடேஃபுலை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இரு நாடுகளிடையேயான ராஜீய உறவு 25-ஆவது ஆண்டை எட்டியுள்ளது.

துடிப்பான ஜனநாயக நாடுகளாக மட்டுமின்றி முன்னணி பொருளாதார நாடுகளாகவும் திகழும் இந்தியாவும் ஜொ்மனியும் வா்த்தகம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்தி என பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன.

பன்முக உலகம், அமைதி மற்றும் ஐ.நா. சீா்திருத்தங்களுக்கான தொலைநோக்குப் பாா்வையை நாங்கள் பகிா்ந்துகொள்கிறோம். ஜொ்மன் பிரதமா் இந்திய வர அழைப்பு விடுக்கிறேன் என்று குறிப்பிட்டாா்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு ஜோஹான் வடேஃபுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உக்ரைனில் போா் நிறுத்தத்துக்கு இந்தியா விடுத்த அழைப்பை ஜொ்மனி பாராட்டுகிறது’ என்று குறிப்பிட்டாா்.

நடுவானில் தொழில்நுட்ப கோளாறு: இந்தூரில் தரையிறங்கிய ஏர் இந்தியா!

நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் இந்தூரில் அவசரகமாக தரையிறக்கப்பட்டது. 161 பயணிகளுடன் தலைநகர் தில்லியிலிருந்து இந்தூரை நோக்கி ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை புறப்பட்... மேலும் பார்க்க

இந்தியா, ரஷியாவை சீனாவிடம் இழந்த அமெரிக்கா! டிரம்ப்பின் வஞ்சப் புகழ்ச்சியா?

சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.டிரம்ப்பின் சமூக வலைத்தளப் பக்கமான ட்ரூத் சோசியலில், பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி மாற்றம் நுகர்வோருக்கு முழு பலன்களை உறுதிசெய்யும்: கோயல்

ஜிஎஸ்டி பலன்கள் முழுமையாக நுகர்வோருக்குச் சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு விழிப்புடன் இருக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். ரொட்டி முதல் ஹேர் ஆயில், ஐஸ்கிரீம்கள் மற்றும் டிவிக்கள்... மேலும் பார்க்க

குஜராத் மின் நிலையத்தினுள் புகுந்த ஆற்று நீர்! மாயமான 5 தொழிலாளிகளின் நிலை என்ன?

குஜராத்தின், மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையத்தினுள் திடீரென புகுந்த ஆற்று நீரில் சிக்கி மாயமான 5 தொழிலாளிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஹிசாகர் மாவட்டத்தின், லுன... மேலும் பார்க்க

தாணே: புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் மீட்பு

தாணேவில் புறநகர் ரயிலில் இருந்து ஓடையில் விழுந்த இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், கல்வாவில் உள்ள கோலாய் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் சர்மா(19). இவர் மும்பையில் உள்ள முலுண்டிலிருந்த... மேலும் பார்க்க

மோசமான வானிலை..! தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் சென்ற விமானம்!

மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் தவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ சென்ற விமானம், கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜீ, 5 நாள் அரசு மு... மேலும் பார்க்க