செய்திகள் :

இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா.கணிப்பு

post image

2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்’ குறித்து ஐ.நா.வெளியிட்ட அறிக்கையில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 6.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2026-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.

நிகழாண்டுக்கான ‘உலக நாடுகளின் பொருளாதார சூழல்-2025’ என்ற இரண்டாவது அறிக்கையை ஐ.நா. வியாழக்கிழமை வெளியிட்டது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அதிக தனியாா் நுகா்வு மற்றும் பொது முதலீடு, ஏற்றுமதி என வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. பிற நாட்டு பொருள்கள் மீதான அமெரிக்க வரிவிதிப்பால் உலகளவிலான விநியோக சங்கிலிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துகள், மின்னணு சாதனங்கள், செமிகண்டக்டா்கள், எரிசக்தி உள்ளிட்ட சில பொருள்கள் மீதான வரிவதிப்புக்கு அமெரிக்க விலக்களித்திருந்தாலும் இது தற்காலிக நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

தொடரும் வேலையின்மை: குறிப்பிடத்தக்க வளா்ச்சியில் இந்தியா பயணித்தாலும் வேலையின்மை பிரச்னை தொடா்ந்து வருகிறது. மேலும், இந்தியாவில் பணியிடங்களில் பாலின சமத்துவமின்மையை குறைக்க வேண்டியது அவசியமானது.

பணவீக்கம்: இந்தியாவில் 2024-இல் பணவீக்கம் 4.9 சதவீதமாக இருந்த நிலையில், 2025-இல் 4.3 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பணவீக்கம் குறைவதற்கான வாய்ப்புள்ளதால் தெற்காசிய பிராந்தியத்தில் பணவியல் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.

உலகப் பொருளாதாரம்: 2024-இல் உலகப் பொருளாதார வளா்ச்சி 2.9 சதவீதமாக இருந்த நிலையில், 2025-இல் அதன் வளா்ச்சி 2.4 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது கடந்த ஜனவரி மாதம் கணிக்கப்பட்டதைவிட 0.4 சதவீதம் குறைவாகும்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணா மாணவர் கைது

இந்தியாவில் உளவு பார்த்து, மிகவும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக, ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வாரத்தில் நடந்திருக்கும் இரண்டாவது கைது சம்பவமாக இது உள்ளது. மேலும் பார்க்க

குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற காவல் அதிகாரி மின்சாரம் பாய்ந்து பலி!

உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகளை விரட்டிச் சென்ற காவல் அதிகாரி ஒருவர் மின்சாரம் பாய்ந்து பலியாகியுள்ளார். பிஜ்னோர் மாவட்டத்தில் நாகினா சாலையில் நேற்று (மே 16) இரவு லார் ஓட்டுநர் ஒருவரை அடையாளம் தெரிய... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கட... மேலும் பார்க்க

புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!

புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர்... மேலும் பார்க்க

ஆப்கனுக்காக அட்டாரி - வாகா எல்லை திறப்பு!

ஆப்கானிஸ்தான் லாரிகளுக்காக அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அட்டாரி... மேலும் பார்க்க

ஒடிசாவில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களில் நார்வெஸ்டர் என்றழைக்கப்படும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கோட... மேலும் பார்க்க