செய்திகள் :

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தா் நியமனம்

post image

தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) புதிய துணைவேந்தராக பேராசிரியா் உமா கஞ்சிலால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

‘பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்படும் முதல் பெண் துணைவேந்தா் இவா்’ என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியரான உமா கஞ்சிலால், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி முைறையில் 36 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்றவா். தற்போது பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக பணியாற்றி வரும் இவா், இணையவழி கல்வி இயக்குநா், தகவலியல் மற்றும் புதுமை கற்றலுக்கான மைய இயக்குநா், சமூக அறிவியல் பிரிவு இயக்குநா், பல்கலைக்கழக நூலகா் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா்.

மத்திய அரசின் முதன்மையான எண்ம கல்வித் திட்டமாக ‘ஸ்வயம்’ மற்றும் ‘ஸ்வயம் பிரபா’ திட்டத்துக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உமா கஞ்சிலால் இருந்து வருகிறாா். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் எண்ம உள்கட்டமைப்பு மற்றும் இணையவழி கல்வித் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும் இவா் முக்கிய பங்காற்றியுள்ளாா் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரபல உணவகத்தில் தயாராகும் சிக்கன் உணவு வகைகளால் ஆபத்து! ஆய்வில் அம்பலம்

பெங்களூரில் தரமற்ற சிக்கன் உணவு விற்கப்படுவது உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.கர்நாடக மாநில உணவு ஆய்வகம் வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவுகளால் பெங்களூரில் பிரபலமான உணவகமாக அறியப்... மேலும் பார்க்க

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில், மாணவர்களின் தற்கொலை எண்ணத்தைப் போக்க உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.ஆந்... மேலும் பார்க்க

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!

நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்: சுப்ரியா சுலேரவி கிஷன்நிஷிகாந்த் து... மேலும் பார்க்க

அவைத் தலைவரிடம் முதல் கோரிக்கை வைத்து திட்டு வாங்கியதைப் பகிர்ந்த கிரண் ரிஜிஜு

புது தில்லி: நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தான் முதன் முதலில், அவைத் தலைவரை சந்தித்தபோது வைத்தக் கோரிக்கையும் அதனால் அவரிடம் திட்டு வாங்கியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.தான் அரசியலில் ... மேலும் பார்க்க

மன அழுத்தத்தை ஏற்படுத்திய கல்லூரி நிர்வாகம்: உதய்பூரில் பல் மருத்துவ மாணவி தற்கொலை!

உதய்பூர் அருகேயுள்ள டெபாரியில் பல் மருத்துவம் பயிலும் தனியார் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை காவலரின் ஒரே மகள் ஸ்வேதா சிங்(25). இவர் ... மேலும் பார்க்க