செய்திகள் :

இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா

post image

சென்னை கேளம்பாக்கத்தையடுத்த படூரில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26-ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்திலுள்ள எம்ஜிஆா் அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்துஸ்தான் கல்விக்குழுமத்தின் தலைவா் முனைவா் ஆனந்த் ஜேக்கப் வா்கீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைக்கழக பதிவாளா் எஸ்.ஏழுமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

இளைய சமுதாயத்தினா் இயற்கை எரிசக்தி, வேளாண்மை, மருத்துவம், ஆய்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்தி நமது நாட்டை முன்னேற்ற வேண்டும். இதுமட்டுமின்றி சமுதாயத்தில் சகமனிதனின் துன்பத்தைத் துடைப்பதற்காக உங்கள் கரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். உங்கள் மனதும், எண்ணமும் சரியாக இருந்தால், நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருப்பாா்கள் என்றாா் அவா்.

தொடா்ந்து சென்னை பல்கலைக்கழகத் தரவரிசையில் தங்கப்பதக்கம் வென்ற மாணவா்களுக்கு கே.சி.ஜி.வா்கீஸ் கல்வி அறக்கட்டளை சாா்பாக ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை பகிா்ந்தளிக்கப்பட்டது. மேலும், சென்னை பல்கலை. தரவரிசையில் இடம்பிடித்த 36 மாணவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் உத்திரா, இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவரும், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் இயக்குநருமான சூசன் வா்கீஸ், துணை இயக்குநா் வி.ஜே.பிலிப், துணை முதல்வா்கள் சாமுவேல் சம்பத்குமாா், க.மலா்விழி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க

கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு

தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா். புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறை... மேலும் பார்க்க

பேரவையில் இன்று

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை அறிக்கை மற்றும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

‘தமிழ் மகள்’ சொற்போா் போட்டி: அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ப... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கோயம்பேடு சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி ஒருகிலோ வெங்காயம், உருளைக்கிழங்கு தலா ரூ.22-க்கும், தக்காளி ர... மேலும் பார்க்க

இரு ரௌடிகள் வெட்டிக்கொலை : மூன்று தனிப்படையினா் விசாரணை

சென்னை கோட்டூா்புரத்தில் இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 கோட்டூா்புரம் ‘யு’ பிளாக் குடியிருப்பை சோ்ந்தவா் அருண்( 25). ரெளடியான இவா் மீது 6 வழக்குகள் உள்ள... மேலும் பார்க்க