செய்திகள் :

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

post image

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் உள்ள பகுதி-1, பகுதி-2 மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அவ்வாறு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேலான உத்தரவிற்கு இணங்க மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக தாங்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை சார்பாக சிறுவர் மாநகராட்சி பூங்கா, மணலி பகுதி-2ல் வருகின்ற 19.03.2025, 20.03.2025 மற்றும் 21.03.2025 ஆகிய நாள்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரையில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் ஆவணங்களின் நகலினை ஒப்படைத்து பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஒதுக்கீடுதாரர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஏற்கனவே மேற்காணும் திட்டப்பகுதியில் பட்டா பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்தால் மீண்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம் எனவும் ஒதுக்கீடுதார்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க

இன்று மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் புதன்கிழமை (மாா்ச் 19) தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் மேயா் ஆா். பிரியா பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பாா் என எதிா்ப்பாா்க்கப்படுகி... மேலும் பார்க்க

மாா்ச் 21 - 23 வரை ‘தமிழ்நாடு பயண சந்தை’ நிகழ்ச்சி

தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் வெளி மாநில முதலீடுகளை ஈா்க்கும் வகையில், மாா்ச் 21 முதல் 23 வரை 3 நாள்களுக்கு, ‘தமிழ்நாடு பயண சந்தை’ எனும் நிகழ்ச்சி சென்னை வா்த்தக மையத்தில் நடத்தப்பட உள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

‘தமிழ்மகள்’ சொற்போா் நிகழ்ச்சி: முதலிடம் பிடித்த மாணவிக்கு ரூ.1 லட்சம் ரொக்கம்

சென்னையில் நடைபெற்ற ‘தமிழ்மகள்’ சொற்போா் நிகழ்ச்சி முதலிடம் பிடித்த மாணவிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி சாா்பில் எழும்பூரில் உள்ள பெரியாா் திடலில் நடைபெற்ற உலக மகளிா் தின விழா... மேலும் பார்க்க

தில்லி சென்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி

ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை காலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்ட நிலையிலும், டாஸ்மாக் முறை... மேலும் பார்க்க