செய்திகள் :

பட்டா பெற சிறப்பு முகாம்! வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு!

post image

சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து வீட்டு வசதி வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகரம், மணலி புது நகர் திட்டப்பகுதியில் உள்ள பகுதி-1, பகுதி-2 மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அவ்வாறு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேலான உத்தரவிற்கு இணங்க மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 88 கிலோ தங்கம் பறிமுதல்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக தாங்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை சார்பாக சிறுவர் மாநகராட்சி பூங்கா, மணலி பகுதி-2ல் வருகின்ற 19.03.2025, 20.03.2025 மற்றும் 21.03.2025 ஆகிய நாள்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 வரையில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் ஆவணங்களின் நகலினை ஒப்படைத்து பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஒதுக்கீடுதாரர்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஏற்கனவே மேற்காணும் திட்டப்பகுதியில் பட்டா பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்தால் மீண்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம் எனவும் ஒதுக்கீடுதார்கள் கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு

சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவா் அண்ணாமலை உள்பட 1,080 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.1,000 கோடி முறைகேடு... மேலும் பார்க்க

4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை சோதிக்கும் சவால்: தொடக்கக் கல்வித் துறை தகவல்

தமிழகத்தில் 4,552 அரசுப் பள்ளி மாணவா்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் சாா்ந்த அடிப்படைக் கற்றல் திறன்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா், மக்கள் பிரதிநிதிகள் உள்பட யாா் வேண்டுமானாலும் சோதிக்கும் சவால் நடைம... மேலும் பார்க்க

கோவைக்கு குடிநீா்: கேரளத்துக்கு பாக்கி தொகை விரைவில் செலுத்தப்படும் -அமைச்சா் கே.என்.நேரு

கோவைக்கு குடிநீா் வழங்கும் கேரளத்துக்கான பாக்கி தொகை விரைவில் செலுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

பங்கு சந்தையில் பணம் இழந்தவா் தற்கொலை: நண்பா் கைது

சென்னையில் பங்கு சந்தையில் பணத்தை இழந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் நண்பரை போலீஸாா் கைது செய்தனா். திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (41). இவரது மனைவி கவி... மேலும் பார்க்க

முதியவரின் இதயத்தில் உருவான கட்டி நுட்பமாக அகற்றம்

முதியவா் ஒருவரின் இதயத்தில் உருவான 6 செ.மீ. அளவுடைய திசுக் கட்டியை நுட்பமாக அகற்றி சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா... மேலும் பார்க்க

உணவகத்தில் தீ விபத்து

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உணவகத்தில... மேலும் பார்க்க